ஜஸ்ட் ரூ 20 செலுத்தினால் போதும்! ரூ 2 லட்சம் காப்பீடு கிடைக்கும்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
சென்னை: வெறும் ரூ 20 செலுத்தினால் மத்திய அரசின் ரூ 2 லட்சம் காப்பீடு கிடைக்கும். எனவே இந்த திட்டத்தை மிஸ் செய்துடாதீங்கள். இதற்கு பெயர் பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா காப்பீடு திட்டம் ஆகும். காப்பீடு என்பது அனைவருக்கும் முக்கியமான ஒரு திட்டம். அதிலும் அரசே இப்படி குறைந்த விலையில் கொடுக்கும் போது அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த திட்டம் குறைந்த அளவு வருமானம் கொண்ட மக்களுக்கு பொருந்தும். அவர்களுக்கான வாழ்க்கைக்கு பாதுகாப்பை அளிக்கும் நோக்கத்திலும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது 2015 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது.

மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடு, வாகன காப்பீடு என இருக்கின்றன. அந்த வகையில் மருத்துவக் காப்பீடானது ஆண்டுக்கு இத்தனை ரூபாய் பிரீமியம் செலுத்தினால் விபத்து, உடல் உபாதைகள் ஏற்பட்டால் நிபந்தனைகளுக்குள்பட்டு அதற்கான செலவை காப்பீட்டு நிறுவனங்களே ஏற்கும்.
அது போல் ஆயுள் காப்பீடானது ஆண்டுக்கு இத்தனை என பிரீமியம் செலுத்த வேண்டும். விபத்து நேர்ந்து மரணமடைந்தாலும் அகால மரணம் அடைந்தாலும் இயற்கை மரணம் அடைந்தாலும் இத்தனை தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது போல் வழங்கப்படும்.
இதுபோல்தான் வாகன காப்பீடும். விபத்து ஏற்பட்டாலோ, இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டாலோ நிபந்தனைக்குள்பட்டு தொகையை காப்பீட்டு நிறுவனம் அளிக்கும். ஹாலிவுட் நடிகை ஒருவர் தனது உதட்டிற்கு காப்பீடு செய்திருந்தார். அது போல் பாலிவுட்டில் ஒரு நடிகை தனது தொடைக்கு இன்சூரன்ஸ் செய்திருந்தார்.
பிரதமரின் காப்பீட்டு திட்டத்தில் 2015 ஆம் ஆண்டு பிரீமியத் தொகை ஆண்டுக்கு ரூ 12 ஆக இருந்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி முதல் ரூ 20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு வங்கிக் கிளைக்கு சென்று இந்த பாலிசியை பெற விண்ணப்பிக்கலாம்.
18 முதல் 70 வயது உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் இந்த பாலிசியை எடுக்கலாம். இந்த திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் வங்கிக் கணக்கில் இருந்து ரூ 20 கழித்துக் கொண்டு காப்பீட்டுத் திட்டத்தில் வரவு வைக்கப்படும். அரசு மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களும் இந்த காப்பீட்டு திட்டத்தை வழங்குகின்றன.
மேலும் விவரம் அறிய https://nationalinsurance.nic.co.in/en/about-us/pradhan-mantri-suraksha-bima-yojana என்ற அதிகாரபூர்வ இணையதளத்தைப் பார்க்கலாம். இந்த திட்டத்தின் கீழ் விபத்தில் ஒருவர் இறந்துவிட்டால் ரூ 2 லட்சம் காப்பீடு கிடைக்கும். அது போல் விபத்தில் கை,கால்கள் செயலிழந்துவிட்டாலும் அதே தொகை கிடைத்துவிடும். விபத்தில் ஒரு கண், ஒரு கை, ஒரு கால் செயலிழந்துவிட்டால் ரூ 1 லட்சம் இன்சூரன்ஸ் வழங்கப்படும். இந்த திட்டத்தில் தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு எந்த பணமும் தரப்படாது. ஆனால் கொலை நிகழ்ந்து ஒருவர் இறந்தால் காப்பீடு கிடைக்கும்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications