ஜஸ்ட் ரூ 20 செலுத்தினால் போதும்! ரூ 2 லட்சம் காப்பீடு கிடைக்கும்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
சென்னை: வெறும் ரூ 20 செலுத்தினால் மத்திய அரசின் ரூ 2 லட்சம் காப்பீடு கிடைக்கும். எனவே இந்த திட்டத்தை மிஸ் செய்துடாதீங்கள். இதற்கு பெயர் பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா காப்பீடு திட்டம் ஆகும். காப்பீடு என்பது அனைவருக்கும் முக்கியமான ஒரு திட்டம். அதிலும் அரசே இப்படி குறைந்த விலையில் கொடுக்கும் போது அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த திட்டம் குறைந்த அளவு வருமானம் கொண்ட மக்களுக்கு பொருந்தும். அவர்களுக்கான வாழ்க்கைக்கு பாதுகாப்பை அளிக்கும் நோக்கத்திலும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது 2015 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது.

மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடு, வாகன காப்பீடு என இருக்கின்றன. அந்த வகையில் மருத்துவக் காப்பீடானது ஆண்டுக்கு இத்தனை ரூபாய் பிரீமியம் செலுத்தினால் விபத்து, உடல் உபாதைகள் ஏற்பட்டால் நிபந்தனைகளுக்குள்பட்டு அதற்கான செலவை காப்பீட்டு நிறுவனங்களே ஏற்கும்.
அது போல் ஆயுள் காப்பீடானது ஆண்டுக்கு இத்தனை என பிரீமியம் செலுத்த வேண்டும். விபத்து நேர்ந்து மரணமடைந்தாலும் அகால மரணம் அடைந்தாலும் இயற்கை மரணம் அடைந்தாலும் இத்தனை தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது போல் வழங்கப்படும்.
இதுபோல்தான் வாகன காப்பீடும். விபத்து ஏற்பட்டாலோ, இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டாலோ நிபந்தனைக்குள்பட்டு தொகையை காப்பீட்டு நிறுவனம் அளிக்கும். ஹாலிவுட் நடிகை ஒருவர் தனது உதட்டிற்கு காப்பீடு செய்திருந்தார். அது போல் பாலிவுட்டில் ஒரு நடிகை தனது தொடைக்கு இன்சூரன்ஸ் செய்திருந்தார்.
பிரதமரின் காப்பீட்டு திட்டத்தில் 2015 ஆம் ஆண்டு பிரீமியத் தொகை ஆண்டுக்கு ரூ 12 ஆக இருந்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி முதல் ரூ 20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு வங்கிக் கிளைக்கு சென்று இந்த பாலிசியை பெற விண்ணப்பிக்கலாம்.
18 முதல் 70 வயது உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் இந்த பாலிசியை எடுக்கலாம். இந்த திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் வங்கிக் கணக்கில் இருந்து ரூ 20 கழித்துக் கொண்டு காப்பீட்டுத் திட்டத்தில் வரவு வைக்கப்படும். அரசு மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களும் இந்த காப்பீட்டு திட்டத்தை வழங்குகின்றன.
மேலும் விவரம் அறிய https://nationalinsurance.nic.co.in/en/about-us/pradhan-mantri-suraksha-bima-yojana என்ற அதிகாரபூர்வ இணையதளத்தைப் பார்க்கலாம். இந்த திட்டத்தின் கீழ் விபத்தில் ஒருவர் இறந்துவிட்டால் ரூ 2 லட்சம் காப்பீடு கிடைக்கும். அது போல் விபத்தில் கை,கால்கள் செயலிழந்துவிட்டாலும் அதே தொகை கிடைத்துவிடும். விபத்தில் ஒரு கண், ஒரு கை, ஒரு கால் செயலிழந்துவிட்டால் ரூ 1 லட்சம் இன்சூரன்ஸ் வழங்கப்படும். இந்த திட்டத்தில் தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு எந்த பணமும் தரப்படாது. ஆனால் கொலை நிகழ்ந்து ஒருவர் இறந்தால் காப்பீடு கிடைக்கும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications