ஜஸ்ட் ரூ 20 செலுத்தினால் போதும்! ரூ 2 லட்சம் காப்பீடு கிடைக்கும்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
சென்னை: வெறும் ரூ 20 செலுத்தினால் மத்திய அரசின் ரூ 2 லட்சம் காப்பீடு கிடைக்கும். எனவே இந்த திட்டத்தை மிஸ் செய்துடாதீங்கள். இதற்கு பெயர் பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா காப்பீடு திட்டம் ஆகும். காப்பீடு என்பது அனைவருக்கும் முக்கியமான ஒரு திட்டம். அதிலும் அரசே இப்படி குறைந்த விலையில் கொடுக்கும் போது அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த திட்டம் குறைந்த அளவு வருமானம் கொண்ட மக்களுக்கு பொருந்தும். அவர்களுக்கான வாழ்க்கைக்கு பாதுகாப்பை அளிக்கும் நோக்கத்திலும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது 2015 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது.

மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடு, வாகன காப்பீடு என இருக்கின்றன. அந்த வகையில் மருத்துவக் காப்பீடானது ஆண்டுக்கு இத்தனை ரூபாய் பிரீமியம் செலுத்தினால் விபத்து, உடல் உபாதைகள் ஏற்பட்டால் நிபந்தனைகளுக்குள்பட்டு அதற்கான செலவை காப்பீட்டு நிறுவனங்களே ஏற்கும்.
அது போல் ஆயுள் காப்பீடானது ஆண்டுக்கு இத்தனை என பிரீமியம் செலுத்த வேண்டும். விபத்து நேர்ந்து மரணமடைந்தாலும் அகால மரணம் அடைந்தாலும் இயற்கை மரணம் அடைந்தாலும் இத்தனை தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது போல் வழங்கப்படும்.
இதுபோல்தான் வாகன காப்பீடும். விபத்து ஏற்பட்டாலோ, இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டாலோ நிபந்தனைக்குள்பட்டு தொகையை காப்பீட்டு நிறுவனம் அளிக்கும். ஹாலிவுட் நடிகை ஒருவர் தனது உதட்டிற்கு காப்பீடு செய்திருந்தார். அது போல் பாலிவுட்டில் ஒரு நடிகை தனது தொடைக்கு இன்சூரன்ஸ் செய்திருந்தார்.
பிரதமரின் காப்பீட்டு திட்டத்தில் 2015 ஆம் ஆண்டு பிரீமியத் தொகை ஆண்டுக்கு ரூ 12 ஆக இருந்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி முதல் ரூ 20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு வங்கிக் கிளைக்கு சென்று இந்த பாலிசியை பெற விண்ணப்பிக்கலாம்.
18 முதல் 70 வயது உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் இந்த பாலிசியை எடுக்கலாம். இந்த திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் வங்கிக் கணக்கில் இருந்து ரூ 20 கழித்துக் கொண்டு காப்பீட்டுத் திட்டத்தில் வரவு வைக்கப்படும். அரசு மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களும் இந்த காப்பீட்டு திட்டத்தை வழங்குகின்றன.
மேலும் விவரம் அறிய https://nationalinsurance.nic.co.in/en/about-us/pradhan-mantri-suraksha-bima-yojana என்ற அதிகாரபூர்வ இணையதளத்தைப் பார்க்கலாம். இந்த திட்டத்தின் கீழ் விபத்தில் ஒருவர் இறந்துவிட்டால் ரூ 2 லட்சம் காப்பீடு கிடைக்கும். அது போல் விபத்தில் கை,கால்கள் செயலிழந்துவிட்டாலும் அதே தொகை கிடைத்துவிடும். விபத்தில் ஒரு கண், ஒரு கை, ஒரு கால் செயலிழந்துவிட்டால் ரூ 1 லட்சம் இன்சூரன்ஸ் வழங்கப்படும். இந்த திட்டத்தில் தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு எந்த பணமும் தரப்படாது. ஆனால் கொலை நிகழ்ந்து ஒருவர் இறந்தால் காப்பீடு கிடைக்கும்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications