Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2050ல் வர வேண்டியது இப்போதே வந்துவிட்டது.. wet bulb temperature ஆபத்தானது ஏன்? நிபுணர்கள் வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2050 ஆம் ஆண்டு வரும் என எதிர்பார்த்த வெட் பல்ப் டெம்ப்ரேச்சர் தற்போது வந்துவிட்டது, இது ஏன் இத்தனை ஆபத்து என்பனை தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் பல இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெப்பம் தகித்து வருகிறது. இதனால் சென்னை உள்பட்ட பல்வேறு நகர்ப்புறங்களில் வெப்பநிலை செஞ்சுரி அடித்தது.

Do you know what is Wet bulb temperature?

இனி வரும் காலங்களில் இந்த வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக வெப்பம் இருப்பதாகவே பலர் கூறுகிறார்கள்.

சாதாரணமாகவே மழை குறைந்து தகிக்கும் வெப்பம் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். அப்படியிருக்கும் போது இந்த ஆண்டு வெப்பம் எதனால் ஏற்படுகிறது என்பது குறித்து பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தை சேர்ந்த சுந்தரராஜன் ஒரு ட்விட்டர் பதிவை போட்டுள்ளார்.

அதில் அவர் கூறுகையில் இன்று சென்னையின் "வெட்-பல்பு" வெப்பநிலை 31,3 டிகிரியை எட்டிவிட்டது. பொதுவாக இது "வெப்ப அளவு" (Temperature) மற்றும் வீத ஈரப்பதம் (humidity) கொண்டு "வெட்-பல்பு" வெப்பநிலை கணக்கிடப்படுகிறது. "வெட்-பல்பு" வெப்பநிலை 30 டிகிரியை தாண்டினால் மிகவும் சிக்கலாகும்.

32 டிகிரிக்கு மேல் சென்றால் சிக்கல் கூடுதலாகும், 35 டிகிரியை தொட்டுவிட்டால் உடல் தன்னை குளிர்விக்கும் தன்மையை இழந்துவிடும். இந்த பின்னணியில் "வெட்-பல்பு" நிலை 2050 வாக்கில் வரும் என்று தான் நினைத்திருந்தோம், ஆனால் இப்போதே அந்த நிலையை நெருங்குவது கவலை அளிக்கக்கூடிய அம்சம் என சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

வெப்பநிலை அதிகமாக இருக்கும் போது, காற்றின் ஈரப்பதமும் அதிகமாக இருந்தால் அதை வெட் பல்பு டெம்பரேச்சர் (wet-bulb temperature) என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக மனிதர்களுக்கு வியர்வை மூலமே அவர்களின் வெப்பம் தணிகிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதாவது வியர்வை ஆவியாகும் போது மனிதர்களின் வெப்பத்தை எடுத்துச் செல்கிறது. இதனால் மனிதர்களின் வெப்பநிலை குறைகிறது. ஆனால் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் இந்த செயல்முறை மந்தமாக இருக்கும். அதாவது காற்றில் ஏற்கனவே ஈரப்பதம் அதிகமாக இருந்தால், வியர்வை மெதுவான வேகத்தில்தான் ஆவியாகும்.

எனவே நமது உடலின் வெப்பமும் குறையாமல் இருக்கும். இதனால் வெப்பமும் அதிகரித்துவிடும். வியர்வை வராமல் இருக்கக் கூடாது. அதன் மூலம் உடல் வெப்பமாவதுடன் உடலில் உள்ள கழிவுகளும் வெளியேறும். ஆய்வுகளின் படி, 35 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெட் பல்பு டெம்பரேச்சர் இருந்தால், மனித உடலில் வியர்வை வெளியேறாது. இந்த வெப்பமான சூழலில் குளிர்சாதன வசதி இல்லை எனில் மனிதர்களுக்கு இறக்கும் நிலை சூழல் ஏற்படும்.

நமக்கு உடலில் காய்ச்சல் இருக்கும் போது வியர்வையே வராது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நல்ல உடல் ஆரோக்கியத்துடன், அதிக நீர்ச்சத்துடன், நிழலில் கனமான ஆடைகள் அணியாத ஓய்வில் இருக்கும் நபருக்கும் இந்த வெப்பநிலை ஆபத்தானது தான். பொதுவாக வெப்பநிலையை காட்டிலும் இந்த வெட் பல்ப் டெம்பரேச்சர் நிலை குறைவாகவே இருக்கும். இது அதிகரிக்கும் போது மனிதர்களுக்கு ஆபத்தானது தான்.

காற்று வெப்பம் அதிகமாக இருந்தால், அதில் ஈரப்பதமும் அதிகமாக இருக்கும். எனவே உலக அளவில் வெப்பநிலை அதிகரித்தால் ஈரப்பதமும் அதிகமாகும். இதனால் வெட் பல்பு டெம்ப்ரேச்சரும் அதிகமாகும். தெற்காசியா உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே இந்த வெட் பல்பு டெம்பரேச்சர் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது உலகின் பிற பகுதிகளுக்கும் பரவக்கூடும். புவி வெப்பமயமாதலை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனில் இந்த சிக்கலை நீண்டகாலம் எதிர்கொள்ள நேரிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+