Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரயிலில் ஏன் இந்த மஞ்சள், வெள்ளைக் கோடுகள் இருக்கு தெரியுமா? பயணிகளுக்கு அவசியம் தெரிய வேண்டிய தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயில்களில் செல்லும் போது சில பெட்டிகளில் மஞ்சள், வெள்ளை, பச்சை நிறத்திலான கோடுகள் இருப்பதை பயணிகள் கவனித்து இருக்க கூடும். அல்லது இதுவரை கவனிக்காமல் இருந்தால் இனி ரயில் பயணம் மேற்கொள்ளும் போது இதை கவனித்து பாருங்கள்.. வெறும் டிசைன்களுக்காக இந்த கோடுகள் போடப்படவில்லை. இதற்கு பின்னால் பயணிகள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் இருக்கிறது இது குறித்து பார்க்கலாம்.

ரயில் பயணங்களுக்கு பயணிகள் மத்தியில் எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. சொகுசு, மலிவான கட்டணம், பாதுகாப்பான பயணம் ஆகியவற்றால் பயணிகள் அதிகமாக ரயில் பயணத்தை தான் நாடுவார்கள். இந்திய ரயில்வேயை பொறுத்தவரை உலக அளவில் இரண்டாவது பெரிய நெட்வொர்க் கொண்டது ஆகும். பல லட்ச கணக்கான பயணிகள் ரயில் சேவையை பயன்படுத்துகிறார்கள்.

indian railways trains

மஞ்சள், வெள்ளைக்கோடுகள்: ரயில்களை பொறுத்தவரை பயணிகள் அதிகம் அறிந்திடாத சில சுவாரசிய தகவல்களும் உள்ளன. அவற்றில் ஒன்றைத்தான் இங்கே பார்க்க போகிறோம். சொந்த ஊருக்கோ அல்லது தொலைதூரங்களுக்கு ரயிலில் முன்பதிவு செய்து பலரும் பயணம் செய்து இருப்போம். அப்படி பயணம் செய்யும் போது ரயில் பெட்டிகளில் படிக்கட்டுகளை ஒட்டி வெள்ளை, பச்சை, மஞ்சள் நிறத்தில் கோடுகள் இருக்கும்.

பலரும் இதை கவனித்தாலும் ரயில் பெட்டியின் டிசைன் என நினைத்து இருக்க கூடும். ஆனால், இது ரயில் பெட்டியின் டிசைன் கிடையாது.. இந்த வெள்ளை, மஞ்சள் கோடுகளுக்கு பின்னால் இருக்கும் காணம் என்ன தெரியுமா? அது பற்றிய விவரம் வருமாறு:-

நீல நிறத்தில் இருந்தால்: இந்தியாவில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் ரயில்களின் பெட்டிகள் நீல நிறத்தில் இருக்கும். இந்த நீல நிற பெட்டியில் வெள்ளைக் கோடுகள் இருந்தால் அது முன்பதிவு இல்லாத பொதுப்பெட்டி என்று அர்த்தம். அதே போல மஞ்சள் கோடுகள் இருந்தால் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டி என்று பொருள்.

பச்சை நிற கோடுகளை கூட சில பெட்டிகளில் பார்த்து இருக்கலாம். அப்படி பச்சை நிறத்தில் இருந்தால் அந்த பெட்டி பெண்களுக்கான சிறப்பு பெட்டியாகும். பயணிகள் எளிதாக அடையாளம் கண்டுபிடிக்கும் விதமாக இந்த குறியீடுகள் ரயில் பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ளன. ரயிலில் எத்தனையோ முறை பயணம் செய்து இருக்கிறோம்.. இதை கவனிக்காமல் விட்டு விட்டோம் என பலரும் நினைப்பது புரிகிறது..

கவனித்து பாருங்கள்: இனி ரயிலில் பயணம் செய்ய நேர்ந்தால் பெட்டிகளில் கோடுகள் உள்ளதா என கவனித்து பாருங்கள்... இந்தியாவில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் பல லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். உள்ளூர் பயணம் முதல் தொலை தூர பயணம் வரை பயணிகளின் முதல் சாய்ஸ் ஆக ரயில்கள்தான் இருக்கின்றன.

வந்தே பாரத் ரயில்: இதனால் ரயில்களில் எப்போதுமே பயணிகள் கூட்டம் அலைமோதும். பயணிகளின் வசதியை மேம்படுத்த ரயில்வே உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. ரயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணி, புதிய ரயில்கள் என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில்களும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் கூட சென்னை- நெல்லை, சென்னை - கோவை, சென்னை- மைசூர், கோவை - பெங்களூர் உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேவேளையில், ரயில்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் போதிய அக்கறையை ரயில்வே நிர்வாகம் காட்டுவது இல்லை என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+