சொத்து பத்திரங்கள் தொலைந்து போயிடுச்சா? உடனே இதை பண்ணுங்க.. பத்திர ஆபீஸில் இதை மட்டும் மறக்கக்கூடாது
சென்னை: சொத்து சம்பந்தமான முக்கிய ஆவணங்கள், பத்திரங்கள் எதிர்பாராத விதமாக தொலைந்துவிட்டால் அவைகளை மறுபடியும் பெற முடியுமா? அந்த பத்திரங்களை மீட்க என்ன செய்ய வேண்டும்.
சொத்து சம்பந்தமான ஆவணங்கள், பத்திரங்களை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்... ஒருவேளை அவை திடீரென தொலைந்து போகக்கூடிய சூழல் ஏற்பட்டால், சொத்து தொடர்பான ஆவணங்களின் நகலை எளிதாகவே பெறலாம்.

எப்ஐஆர்: இதற்கு முதலில், நீங்கள் அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும்.. பத்திரங்கள் தொலைந்துவிட்டதாக சொல்லி, முதல் தகவல் அறிக்கை எனப்படும் எஃப்ஐஆர்-யை பதிவு செய்ய வேண்டும்.. அந்த எப்ஐஆரில் ஆவணங்கள் தொலைந்துவிட்டதாக குறிப்பிட வேண்டும்... காரணம், இந்த எப்ஐஆரின் நகல் உரிமையாளரால் எதிர்கால பயன்பாட்டிற்காக பயன்படுத்த உதவும்.
இந்த புகாருக்குரிய ரசீதை கையில் வைத்திருக்க வேண்டும்.. அதேபோல, இன்னவிதமான பத்திரம், இந்த இடத்தில் தொலைந்து விட்டது என்ற தகவலை பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்ய வேண்டும்.
சொத்து விவரங்கள்: குறிப்பாக ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழி செய்தித்தாள்களில் சொத்தின் விவரங்களை தரவேண்டும்.. இழந்த ஆவணங்ளை யாராவது கண்டுபிடித்தால் தொடர்பு கொள்ள வேண்டிய விவரங்கள் பற்றிய அறிவிப்பை தெளிவாக வெளியிட வேண்டும்.
அதேபோல, ஹவுசிங் சொசைட்டியால் ஒதுக்கப்பட்ட பங்குச் சான்றிதழ் தொலைந்து போனால், அதை மறுபடியும் வெளியிடுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். அப்போது எஃப்ஐஆர் நகல் மற்றும் செய்தித்தாள் விளம்பரம் போன்றவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டியது கட்டாயமாகும்...
உறுதிமொழி: குறிப்பிட்ட நாட்கள் கழிந்த பிறகும், உங்களது தொலைந்த பத்திரம் கிடைக்காத பட்சத்தில், காவல் துறையிலிருந்து பத்திரம் கிடைக்கவில்லை (NOT TRACEBLE )என்ற கடிதத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.. பிறகு தொலைந்த பத்திரம் பற்றிய ஆட்சேபம் ஏதுமில்லை என்று நோட்டரி பப்ளிக் ஒருவரிடமிருந்து உறுதி மொழியை பெற்றுக்கொள்ள வேண்டும்.
மேற்கண்ட தகவல்களோடு பத்திரிக்கையில் வந்த விளம்பத்தின் நகல், தொலைந்து விட்ட பத்திரத்தில் உள்ள சர்வே எண் விபரங்கள் உள்ளிட்ட இதர தகவல்கள் ஆகியவற்றோடு சார்பதிவாளரை அணுகி விண்ணப்பம் செய்து கொள்ளவேண்டும்... இதற்கு பிறகு ஓரிரு வாரங்களில் தொலைந்த பத்திரத்தின் பிரதி உங்களுக்கு கிடைத்துவிடும்.
தொலைந்த பத்திரங்கள்: பிரதி பத்திரங்களை பெற்றுக்கொண்ட பிறகு, தொலைந்த பத்திரம் கிடைக்கும்பட்சத்தில், சார்பதிவாளரிடம் அதை முறையாக தெரிவித்து 2 பத்திரங்களில் சட்டப்படி எது செல்லுபடியாகும் என்பதையும் எழுத்துப்பூர்வமாக உறுதி செய்து கொள்வது அவசியம்.
இதுபோன்ற புகார்களுக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்து, எஃப்ஐஆர் பெறும் நடைமுறை வழக்கத்தில் உள்ளதால், போலீசில் புகார் அளிப்பதற்கு முன்பு உங்கள் பகுதியில் இதுபோன்ற வசதி உள்ளதா? என்பதையும் அறிந்து கொள்வது அவசியம்.
பத்திர ஆபீஸ்: எப்போதுமே நீங்கள் பத்திரம் செய்யும்போதே இரண்டாம் பிரதி ( SECOND COPY) என்று குறைவான முத்திரைத்தாளில் பத்திரத்தில் என்னவெல்லாம் எழுதியிருக்கிறோமோ, அதுபோலவே எழுதி, பத்திர ஆபீசிலும் அதே எண்ணில் பதிவு செய்து கொள்வது நல்லது.
எல்லா இடங்களிலும் இந்த SECOND COPY யையே ஒரிஜினலுக்கு பதிலாக காட்டலாம். இதனால், ஒரிஜினல் நம்மிடம் பத்திரமாக எடுக்கும. அதேபோல, எல்லா பத்திரங்களையும் முறையாகவே ஸ்கேன் செய்து, GOOGLE DRIVE ல் SOFT COPY ஆக வைத்து கொள்வது இன்னும் நல்லது.. தேவைப்படும்போது SOFT COPY கள் மூலம் ஜெராக்ஸ் எடுத்து கொள்ளலாம்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications