சூப்பர் நியூஸ்! இது டிரையல்! "இந்த" 6 மாவட்ட ரேஷன் கடைகளில் இனி பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய்
சென்னை: தமிழகத்தில் முதற்கட்டமாக 6 மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் மத்திய அரசு சார்பில் தேங்காய் எண்ணெய் விற்பனை தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் பருப்பு, சர்க்கரை, பாமாயில், மண்ணெண்ணெய் உள்ளிட்டவை விநியோகம் செய்யப்படுகின்றன. இங்கு இலவச ரேஷன் அரிசியும் 20 கிலோ வழங்கப்படுகிறது.

அது போல் பொங்கல் சமயத்தில் அரசு அறிவிக்கும் பரிசு பொருட்கள் கிடைக்கின்றன. அத்துடன் அரசு அறிவிக்கும் சலுகைகளும் இந்த ரேஷன் கார்டின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில் ரேஷன் கடைகளில் விற்கப்படும் பாமாயிலை பலர் வாங்குவதில்லை, இந்த நிலையில் அதை காசுக்கு விற்பனை செய்து விடுகிறார்கள். மேலும் பாமாயில் உடல் நலனிற்கு கேடு விளைவிக்கக் கூடியது என பலர் கருதுகிறார்கள். இதனால் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய்யாக வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இது போல் தேங்காய் எண்ணெய் வழங்கினால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதை உடலில் வெளிப்புறத்தில், தலையில் பூசுவதால் உடலுக்கு தீங்கு ஏற்படும் என்ற அச்சம் தேவையில்லை. எல்லாவிற்றையும்விட தென்னை விவசாயிகளும் பயனடைவார்கள் என விவசாய சங்கங்கள் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து தலைமையில் விவசாயிகள் குழுவினர் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், வேளாண் துறை இணை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி ஆகியோரைச் சந்தித்துப் பேசினர். அப்போது தமிழகத்தில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதன் எதிரொலியாக தமிழகத்தில் முதற்கட்டமாக 6 மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் மத்திய அரசு சார்பில் தேங்காய் எண்ணெய் விற்பனை தொடங்கப்படும். பொதுமக்கள் எப்படி வரவேற்பு அளிக்கிறார்களே அதை பொருத்து மற்ற மாவட்டங்களுக்கும் விரிவடையும். இதை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி அறிவித்துள்ளார்.
மேலும் 6 மாவட்டங்களில் விரைவில் தேங்காய் எண்ணெய் விற்பனை விரைவில் தொடங்கப்படும் என தெரிகிறது. இது வெற்றி அடைந்தால் அழைத்து ரேஷன் கடைகளிலும் தேங்காய் எண்ணெய் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அநேகமாக சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, வேலூர், நீலகிரி என திசைக்கு ஒரு மாவட்டமாக தேங்காய் எண்ணெய் வழங்க வாய்ப்பிருக்கிறது.
-
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி












Click it and Unblock the Notifications