நயன்தாரா சர்ச்சை.. வாடகைத் தாய் முறை யாருக்கெல்லாம் பரிந்துரைக்கப்படுகிறது? முழு விவரம்!
சென்னை: வாடகைத் தாய் மூலம் யாரெல்லாம் குழந்தை பெற்றுக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறார்கள் தெரியுமா?
நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி கடந்த 9ஆம் தேதி தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்ததாக அறிவித்துள்ளனர். இதிலிருந்து சர்ச்சை கிளம்பியது. 4 மாதங்களில் எப்படி குழந்தை பிறக்கும் என கேள்வி எழுந்தது.
மேலும் கர்ப்பிணிகள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என மருத்துவர்களே அறிவுறுத்தும் Picme எனும் எண் நயன்தாரா பெயரில் இல்லை என கூறப்படுகிறது. இதனால் நயன்தாரா இயற்கை முறையில் குழந்தை பெற்றிருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

வாடகைத் தாய்
இதனால் அவர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றிருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். இருவரில் ஒருவருக்கு இயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்ற சான்றிதழை மருத்துவர் வழங்க வேண்டும்.

வாடகைத் தாயாக வரும் பெண்
வாடகைத் தாயாக வரும் பெண் வணிக ரீதியில் இந்த செயலை செய்யக் கூடாது. இதனால் கூடுமானவரை குழந்தையில்லாத தம்பதியின் உறவினரே வாடகைத்தாயாக வரலாம். இவர்களுக்கு 16 மாதங்களுக்கான காப்பீடு, மருத்துவ செலவுகளை மட்டுமே அந்த தம்பதி ஏற்க வேண்டும். இதை தவிர்த்து ஒற்றை ரூபாய் கூட அந்த வாடகைத்தாய்க்கு கொடுக்கக் கூடாது உள்ளிட்ட சட்டவிதிகள் உள்ளன.

திருமணமாகி 5 ஆண்டுகள்
ஆனால் முதல்விதியான திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும் என்ற விதியையே நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு பின்பற்றப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து கருத்தரிப்பு சிகிச்சை வல்லுநர் முல்லை வேலுத்தம்பி தமிழ் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் குழந்தையின்மைக்கான Medical Indication certificateஐ வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்வோர் வாங்க வேண்டும்.

கர்ப்பப்பை இல்லாதவர்கள்
இந்த முறையில் யாரெல்லாம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்றால் கர்ப்பப்பை இல்லாதவர்கள் பெற்றுக் கொள்ளலாம். மேலும் கர்ப்பப்பை வளர்ச்சி இல்லாதவர்கள், நிறைய முறை டெஸ்ட் டியூப் பேபிக்கான சிகிச்சை எடுத்துக் கொண்ட போதிலும் கரு வளர முடியாமல் போதல், கர்ப்பம் ஆகிறார்கள், ஆனால் குழந்தை ஏதாவது ஒரு காரணத்திற்காக அபார்ஷன் ஆகிறது, உடல் ரீதியாக நோய் இருக்கும் பட்சத்தில் குழந்தை பெற்றுக் கொண்டால் அந்த தாயின் உயிருக்கே ஆபத்து எனும் பட்சத்தில் வாடகைத் தாய் முறையை அணுகுகிறார்கள் என அந்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications