சென்னை பல்லாவரம், பம்மலில் அடுக்குமாடி வீடுகளுக்கு அதிகாலையில் வரும் ஆசாமி.. அதிர வைத்த சம்பவம்
சென்னை: சென்னையில் வித்தியாசமான திருடர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.. பைக்கை மட்டும் குறிவைத்து திருடுவது, டிவிஎஸ் எக்ஸ்எல் பைக்கை மட்டும் திருடுவது, ஸ்கூட்டர்களை மட்டும் திருடுவது, ஆட்டோக்களை குறிவைத்து திருடுவது போன்ற பல வகையான வாகன திருடர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் சென்னையில் சைக்கிளை மட்டும் குறிவைத்து திருடும் ஆசாமிகளும் இருக்கிறார்கள். அவர்களின் அட்டகாசம் பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர், பம்மல் பகுதிகளில் அதிகரித்துள்ளது.
சென்னையில் வாகனம் வைத்திருப்போர் அதனை கவனமாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்வது நல்லது. ஏனெனில் திருடர்கள் எந்த வண்டியையும் திருடிவிடுகிறார்கள். மோட்டார் சைக்கிள், கார், ஆட்டோ, ஸ்கூட்டர், சைக்கிள் என எந்த வண்டியையும் விட்டு வைப்பது இல்லை. அதேநேரம் சில திருடர்கள் இந்த வாகனங்களை மட்டுமே திருட வேண்டும் என்று பாலிசியுடன் திருடுகிறார்கள். உதாரணமாக பைக்கை மட்டும் குறிவைத்து திருடுவது, டிவிஎஸ் எக்எல் பைக்கை மட்டும் திருடுவது, ஸ்கூட்டர்களை மட்டும் திருடுவது, ஆட்டோக்களை குறிவைத்து திருடுவது போன்ற பாலிசியுடன் இருக்கிறார்கள்.

குறிப்பிட்ட வாகனத்தை மட்டுமே ஓட்டத்தெரிந்தவர்கள் அல்லது அந்த வாகனங்களின் ரீசேல் வேல்யூ போன்ற காரணங்களால் திருடுகிறார்கள். அப்படி திருடும் வாகனங்களை என்ஜினை தவிர மற்ற அனைத்தையும் விற்றுவிடுகிறார்கள். அல்லது என்ஜினுடன் கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு மிக குறைந்த விலைக்கு விற்றுவிடுகிறார்கள். போலியான ஆர்சிபுக்கை உருவாக்கி இப்படி வாகனங்களை விற்றுவிடுகிறார்கள். இப்படிப்பட்ட கும்பல்களை போலீசார் கைதும் செய்திருக்கிறார்கள்.
இந்நிலையில் சென்னையில் சைக்கிளை மட்டுமே திருடும் கும்பல்கள் குறித்த வீடியோ வெளியாகி உள்ளது. சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர், பம்மல் பகுதிகளில் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதிகாலையில் வாக்கிங் வருவது போல் வந்து நோட்டமிடும் திருடர்கள், வீட்டின் வாசலிலும், அடுக்குமாடிக் குடியிருப்பின் வாகன நிறுத்துமிடங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சைக்கிள்களை தூக்கி சென்றுவிடுகிறார்கள்.
அண்மையில் அனகாபுத்தூர் காமாட்சி நகர் 5-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மர்ம நபர் ஒருவர் அப்படி நுழைந்துள்ளார். அவர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை எந்த பயமும் இன்றி சர்வ சாதாரணமாக வந்து திருடி சென்றார். இந்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் திருடன் புகுந்து சைக்கிளை தூக்கி சென்றிருப்பது குடியிருப்புவாசிகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே அடுக்குமாடி குடியிருப்பின் அருகே உள்ள வீட்டிலும் கடந்த வாரம் சைக்கிள் திருட்டு போயிருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அதிகாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. தொடர் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் குறித்து பம்மல் சங்கர்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
கடவுளே.. பும்ராவே.. வான்கடே மைதானத்தில் பிசிசிஐ சிலை வைக்கணும்.. தெறிக்கும் ரசிகர்களின் மீம்ஸ்! -
அவரு மட்டும் வரல.. அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்காரு! விஜய் செயலால் டென்ஷனான தவெகவினர்! -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
இனிமேல் சர்ச்சில் பேசாதப்பா.. விஜய் - திரிஷா செயலால்.. கோபம் அடைந்த உறவுகள்? பரபரப்பு போஸ்ட்! -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர்












Click it and Unblock the Notifications