Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அசிங்கமா போயிடுச்சே.. ஆசை ஆசையா மாலையோடு மணப்பெண்ணிடம் நெருங்கிய மாப்ளை.. அதுக்குள்ளே அந்த "சம்பவம்"

Subscribe to Oneindia Tamil

சென்னை: மணமக்கள் இருவருமே மணமேடையில் பூரிப்பும், மகிழ்ச்சியுமாய் நின்று கொண்டிருந்தனர்.. அப்போதுதான் திடீரென இந்த சம்பவம் நடந்துள்ளது.. இது வீடியோவாகவும் வெளியாகி இணையத்தில் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

எத்தனையோ திருமணங்கள் தாலி கட்டுவதற்கு கடைசி நிமிடங்களில் நின்றுபோய்விடுகின்றன. அதிலும் வடமாநிலங்களில் திருமணங்களை, மணப்பெண்களே நிறுத்தி விடுகிறார்கள். இதற்கு எத்தனையோ காரணங்கள் உள்ளன.

bride wedding reception bridge groom

உதாரணத்துக்கு மாப்பிள்ளை வாய்ப்பாட்டை சொல்லாதது, உருது வார்த்தைகளை சொல்லாதது என்ற வினோத காரணங்களை மணமகள்கள் அடுக்குகிறார்கள். சில சமயம், மணமகனோ அல்லது மணமகளோ ஓடிப்போய்விடுவதால், திருமண வீடே, களேபரமாகி, கல்யாணம் நின்றுபோன சம்பவங்களும் உண்டு.

திருமணங்கள்: இப்படித்தான் கடந்த வருடம் டெல்லியில் ஒரு கல்யாணம் நடந்தது.. மணமேடையில், மணமகள் வெட்கத்தில் நிற்க, மாப்பிள்ளையோ மணமகளுக்கு, ஸ்வீட் எடுத்து ஊட்ட முயன்றார். ஆனால், மணப்பெண்ணோ, தனக்கு ஸ்வீட் வேண்டாம் என்று சொல்லி, மணமகனை தடுத்தார்.. மாப்பிள்ளையோ விடவில்லை.. வலுக்கட்டாயமாக ஸ்வீட் எடுத்து, மணப்பெண்ணின் வாய்க்குள் திணிக்க முயன்றார்..

அடுத்த செகண்டே ஆவேசம் அடைந்த மணப்பெண், மாப்பிள்ளையை பளார் என்று ஓங்கி கன்னத்தில் அறைந்தார்.. இதை மாப்பிள்ளை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. உடனே அவரும் பதிலுக்கு மணமகளின் தலைமுடியை பிடித்து இழுத்து, பளார் பளார் என 4 அறை விட்டார்.. மணப்பெண்ணும் மாப்பிள்ளையின் சட்டையை பிடித்து இழுத்து அடித்தார். இவ்வளவும் மணமேடையில், எல்லார் கண்முன்பும் அரங்கேறியது.. இவர்கள் 2 பேரையுமே யாராலும் தடுத்து நிறுத்த முடியாமல், கடைசியில் கல்யாணம்தான் நின்றுபோனது.

திருமண நிகழ்வு: இப்போது இன்னொரு திருமண நிகழ்வு இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இது எந்த ஊர் என்று தெரியவில்லை.. எப்போது இந்த சம்பவம் நடந்தது என்றும் தெரியவில்லை.. ஆனால், ஏதோ ஒரு வடமாநிலத்தில் நடந்திருக்கிறது.

மணமக்கள் இருவருமே மேடையில் ஆடை அலங்காரத்துடன் நின்று கொண்டிருக்கிறார்கள்.. மணமக்களை சுற்றிலும், அவர்களது நண்பர்களும் குடும்பத்தினரும் சூழ்ந்துள்ளனர்.. அப்போது மாலை மாற்றும் நிகழ்ச்சி ஆரம்பமானது. இதில், அங்கிருந்த உறவினர்களில் ஒருவர் திடீரென்று பின்பக்கத்திலிருந்து மணப்பெண்ணை பிடித்துள்ளார்.

மாப்பிள்ளை அதிர்ச்சி: தொடர்ந்து பின்புறமிருந்து பிடித்து இழுக்கவும், பொறுமை இழந்த மணமகள் டக்கென திரும்பி அந்த நபரின் கன்னத்தில் பளார் விட்டார்.. அப்போதும் ஆவேசம் அடங்காமல், மறுபடியும் மறுபடியும் கன்னத்தில் அறைந்தார்..

அந்த நபரை பார்த்து, ஆத்திரத்துடன் கத்திக்கொண்டே இருந்தார்.. மணமகளுக்கு ஆசையாக மாலை போடுவதற்காக நின்றிருந்த மணமகன், பெண்ணின் இந்த ஆக்ரோஷத்தை பார்த்ததுமே வெலவெலத்து போய்விட்டார்..

கமெண்ட்கள்: ஒட்டுமொத்த பேரும் பெண்ணையே அதிர்ந்து பார்த்தனர். இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகிறது.. ஒரு பெண்ணுக்கு இவ்வளவு கோபம் கூடாது என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.. மேலும் சிலரோ, இதுபோல முறையின்றி நடந்துகொள்வதற்கு, மணப்பெண் செய்ததுதான் சரி என்று ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். ஆனால், இந்த கல்யாணம் நல்லபடியாக நடந்து முடிந்ததா? என்றே கடைசிவரை தெரியவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+