Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீட்டு வாசலில் இருந்த செருப்புகளையும் ஷூக்களையும் நாய்கள் ஏன் கடிக்கிறது? இம்புட்டு உருக்கமான கதையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீட்டு வாசல்களில் விட்டிருக்கும் செருப்புகள், ஷூக்களை அடிக்கடி நாய்கள் கடிப்பது ஏன் தெரியுமா?

நாய் நன்றியுள்ள ஜீவன் என்போம். பாசத்துடனும் பரிவுடனும் பழகும் விலங்கு நாய்தான்! நட்பு என்ற குணம் நாய்களுக்கு இயற்கையாகவே இருக்கிறது என விலங்குகள் ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

do you know why dogs are biting slippers and shoes


நாய்களை வளர்த்தாலே நமக்கு வரும் ஆபத்தை அவை எடுத்துக் கொள்ளும். நமக்காக எதையும் செய்யும் நாய்கள். எத்தனையோ இடங்களில் தங்கள் உரிமையாளர்கள் இறந்தாலும் அவர்கள் நினைவாக ஏங்கி தவிக்கும் நாய்களை பார்த்துள்ளோம்.

உரிமையாளரின் உடல் ஏதாவது இயற்கை பேரிடரில் காணாமல் போய்விட்டால் அந்த இடத்தையே நாய்கள் சுற்றி சுற்றி வந்து பார்க்கும். இப்படியாக நாய்களின் பாசத்தை அடுக்கிக் கொண்டே போகலாம். நாய்களில் தற்போது நிறைய வெளிநாட்டு இனங்கள் வந்துவிட்டன.

அவற்றை வாங்கி மக்கள் வீடுகளில் வளர்க்கத் தொடங்கிவிட்டார்கள். நாய்களுக்கு நாம் சொல்வது புரியும். விலங்குகளுக்கு 5 அறிவு என சொல்வது தவறு. நாம் கோபமாக இருக்கிறோமா, இல்லை திட்டுகிறோமா என்பதெல்லாம் அவைகளுக்கு தெரியும். அதற்காக முகத்தை டைப் டைப்பாக மாற்றிக் கொள்ளும்.

நாம் இறங்கி வந்தால் அது முகத்தை கறாராக வைத்துக் கொள்ளும், கோபமாக இருந்தால் முகத்தை பாவமாக வைத்துக் கொள்ளும். இப்படியாக நாய்களுக்கு அறிவு அதிகம். இந்த நாய்களுக்கென எத்தனையோ பொம்மைகளையும் விளையாட்டு பொருட்களையும் நாம் வாங்கி கொடுக்கிறோம்.

do you know why dogs are biting slippers and shoes

ஆனால் அவற்றின் கவனம் எல்லாம் கந்தல் துணி அல்லது ஷூக்கள், செருப்புகளில்தான் செல்கின்றன. நாய்கள் ஏன் அவ்வாறு செய்கின்றன தெரியுமா. வீட்டு வாசல்களில் நிறுத்தி வைக்கப்படும் செருப்புகளை அந்த பகுதியில் வசிக்கும் அல்லது அந்த குடியிருப்புக்கு அடிக்கடி வரும் நாய்கள் தூக்கிக் கொண்டு போய்விடும்.

செருப்பை காணாமல் நாம் ஓடி போய் பார்த்தால் அந்த நாய்கள்தான் கடித்து வைத்திருக்கும். இதற்கு முதல் காரணம் நம் மீதான பாசத்தை நேசிக்கவே அவை இவ்வாறு செய்கின்றன. நமது உடல் வாசனை அந்த நாய்களுக்கு பிடிக்கும் என்பதால் இப்படி செய்து அந்த வாசனையை தக்க வைத்துக் கொள்கிறது. அந்த செருப்புகளுக்கு சொந்தக்காரர்கள் அந்த நாய்களை விட்டு பிரிந்து விட்டாலும் அந்த செருப்பை கடித்து தன் பாசத்தை வெளிப்படுத்தும்.

சில சமயங்களில் பசிக்காகவும் செருப்பை கடித்து சாப்பிட்டிருக்கும். இன்னொரு செருப்பை வைத்து விளையாடுவதற்காகவும் ஷூக்களையும் செருப்புகளையும் கொண்டு சென்றிருக்கும். இதே போல்தான் கந்தல் துணி, துணிகளுக்கும் பொருந்தும். விளையாட்டுக்காகவும் பாசத்திற்காகவும் நாய்கள் இவற்றை கடிக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+