ஷாப்பிங் மால், தியேட்டர்களில் கழிப்பறையின் கதவுகளுக்கு கீழ் ஏன் இடைவெளி இருக்கிறது தெரியுமா?
சென்னை: பொது இடங்களில் உள்ள கழிப்பிடங்களில் கதவுகள் சிறியதாக இருப்பதும் கீழே அதிக இடைவெளி இருப்பதும் ஏன் தெரியுமா?
தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் உள்ள பொதுக் கழிப்பிடங்களில் கதவுக்கு கீழ் அத்தனை பெரிய கேப் இருக்கும். இதனால் அதன் உள்ளே சென்றாலே யாராவது பார்த்துவிடுவார்களோ என்று கூட சிலர் அஞ்சுவார்கள்.

ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே கழிப்பறை வசதிகள் இருந்தாலும் யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற பயம் மட்டும் அவர்களை விட்டு விலகவில்லை. இதே போன்று கழிப்பறைகளின் கதவுகளை நாம் வீடுகளிலோ அல்லது ஹோட்டல்களிலோ பார்ப்பதில்லை.
அது ஏன் ஷாப்பிங் மால், மருத்துவமனை, தியேட்டர் உள்ளிட்ட இடங்களில் மட்டும் அப்படி இருக்கிறது. அதற்கான காரணம் என்ன தெரியுமா? இது எதற்கு என்றால் பொதுக் கழிவறையின் தரை பகுதியில் அடிக்கடி அசுத்தமாகும், தண்ணீர் தேங்கும். அதை கழிவறைக்குள் செல்லாமலேயே சுத்தப்படுத்ததான் இந்த மாதிரி அமைக்கப்பட்டுள்ளது.
வெளியே இருந்தபடியே தண்ணீரை ஊற்றி மாப்பை போடுவார்கள். அது மட்டுமல்லாமல் மால்கள், தியேட்டர்கள் மூடிபடியே சூரிய வெளிச்சம் இல்லாமல் இருக்கும். இதனால் ஏசி வசதி செய்யப்பட்ட நிலையில் பொதுக் கழிப்பறைகள் துர்நாற்றம் வீசக் கூடும். இப்படி கதவுக்கு அடியில் கேப் இருந்தால் அந்த துர்நாற்றம் வீசுவதும் குறையும்.
மேலும் வீடுகளில் கழிப்பறைக்குள் சென்றவர்களுக்கு உடல் உபாதை ஏற்பட்டு அங்கேயே விழுந்துவிட்டால் நமக்கு எப்படியும் தெரிந்துவிடும். ஆனால் ஷாப்பிங் மால்களில் கழிப்பறைக்குள் போனவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துவிட்டாலோ அரை கதவு வழியாக தெரிந்து விடும். மேலும் கதவுகளை அவ்வப்போது திறப்பது, மூடுவது என இருப்பதால் கதவின் கீழ் பகுதி சேதமடையும். அதிலிருந்து தவிர்க்கவும் இந்த ஏற்பாடு என்கிறார்கள்.
உள்ளே மாட்டிக் கொள்வோருக்கு உதவி தேவைப்பட்டால் கூட நாம் அந்த கதவுகளின் கேப்களின் வழியாக ஏதாவது செய்யலாம். அது போல் கழிப்பறைக்குள் சென்றதும் ஆள் இருக்கிறார்களா இல்லையா என்று கூட பார்க்காமல் சிலர் கதவை திறக்க முயல்வார்கள். இதே இது போன்ற கழிப்பறைகளில் கீழே கால்கள் தெரிவதை வைத்து உள்ளே ஆள் இருப்பதை தெரிந்து கொள்வர்கள். மேலும் பொதுக் கழிவறைக்குள் போதை மருந்து பயன்படுத்துவது, வன்முறையில் ஈடுபடுவது, பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது உள்ளிட்டவை தெரிந்துவிடும். இதனால் அவர்கள் அச்சப்பட்டு அதை செய்ய மாட்டார்கள்.
-
IT Jobs: 3 பிரிவில் காலியிடங்கள்.. சென்னை உள்பட 2 இடங்களில் மார்ச் 21ல் இண்டர்வியூ.. ரெடியா? -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை












Click it and Unblock the Notifications