பிஎப் அட்வான்ஸ் எடுக்க முடியலையா.. பிஎப் கணக்கில் நீண்ட காலமாக சிக்கலா.. சட்டென சரியாக வேண்டுமா?
சென்னை: சிலர் அடிக்கடி நிறுவனம் மாறுவார்கள்.. வேலை செய்யும் நிறுவனத்தை அடிக்கடி மாற்றினால், முறையாக ஒவ்வொரு கம்பெனியில் இருந்து விலகுவதுதான் நல்லது. அப்படி விலகி கையோடு உடனே, அந்த நிறுவனத்தின் பிஎப் கணக்கில் உள்ள பணத்தை தற்போது வேலை செய்யும் நிறுவனத்திற்கு மாற்றுவது நல்லது.. இதை பற்றி முழுமையாக பார்ப்போம்..
epfo (தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பிஎப் பணம் சேமிப்பு என்பது மாதச் சம்பளம் வாங்குவோரின் முக்கியமான இரும்பு பெட்டியாகும். கஷ்டம் வரும் போது எல்லாம்.. அதாவது யாருமே கை கொடுக்காத நிலையில், எல்லா சூழ்நிலைகளும் நமக்க எதிராகவும் இருந்தால், அப்போது கண்ணை மூடிவிட்டு பிஎப் கணக்கை திறந்து பார்த்தால் நிச்சயம் நமக்கு கைகொடுக்கும்..

பிஎப் பணத்தை பொறுத்தவரை மிகமோசமான சூழ்நிலைகளில் மட்டுமே எடுக்க வேண்டும்.. அடிக்கடி எடுக்கக்கூடாது.. முடிந்தவரை எடுக்காமல் இருப்பதே நல்லது. அப்படி இருந்தால் மட்டுமே பின்னாளில் இடம் வாங்க அல்லது வீடு கட்ட அல்லது ஓய்வு காலத்தில் சந்தோஷமாக வாழ்க்கையை கழிக்க, மகன் அல்லது மகள் உயர்கல்வியை சிறப்பாக பயில உதவும்..
சரி விஷயத்திற்கு வருவோம்.. பிஎப் எனப்படும் epfo அக்கவுண்டில் ஒரு uan நம்பர் தான் ஒருவருக்கு இருக்கும்.. ஆனால் எத்தனை பிஎப் கணக்கு வேண்டுமானாலும் தொடங்கலாம். நீங்கள் கடைசியாக பணியாற்றும் நிறுவனத்திற்கு ஒரு பிஎப் கணக்கு, அதற்கு முந்தைய நிறுவனங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு பிஎப் கணக்கு இருக்கும்..
அடிக்கடி நிறுவனம் மாறுவோர்.. முடிந்த வரை அப்படி செய்வதை தவிர்ப்பது நல்லது.. அப்படி மீறி மாறித்தான் ஆக வேண்டும் என்றால், கண்டிப்பாக முறைப்படி வெளியேற வேண்டும். ஒரு நிறுவனத்தில் இருந்து இன்னொரு நிறுவனத்திற்கு மாறுகிறீர்கள் என்றால், அங்கு உங்கள் பிஎப் கணக்கு தொடங்கிய தேதியையும் (வேலையில் சேர்ந்த தேதி), நீங்கள் வேலையைவிட்டு நின்ற தேதியையும் (பிஎப் கணக்கு நிறைவுநாள்) அந்த குறிப்பிட்ட பிஎப் கணக்கில் அந்த நிறுவனத்தின் ஹெச்ஆர் குறிப்பிட்ட வேண்டும். முறைப்படி வெளியேறினால் தான் அதனை பிஎப் கணக்கில் தனியார் நிறுவனங்கள் குறிப்பிடும்..
அப்படி குறிப்பிட்டால் மட்டுமே இப்போது நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் பிஎப் கணக்கு பணத்தை மாற்ற முடியும். பிஎப் கணக்கை வேலையைவிட்டு நின்ற உடனேயே மாற்றி விடாவிட்டால், பின்னாளில் சிக்கல் வரும்.. எனவே பழைய பிஎப் கணக்கில் உள்ள பணத்தை கையோடு புதிய நிறுவனத்தின் பிஎப் கணக்கிற்கு மாற்றுவதற்கு பிஎப் இணையதளத்தில் விண்ணப்பியுங்கள். ஒரு வேளை அதற்கு விண்ணப்பிக்க முடியவில்லை என்றால், பழைய நிறுவனம் நீங்கள் வேலையைவிட்டு நின்றதை குறிப்பிடாமல் விட்டுள்ளது என்று அர்த்தம்..
அதை கவனித்து மாற்றி விடுங்கள் . அப்படி நீங்கள் வேலையை விட்டு நின்ற அத்தனை நிறுவனங்களிலும் மாறி ஒரே நிறுவனத்திற்கு பணத்தை மாற்றி வைத்துக்கொள்ளுங்கள்.. அப்படி மாற்றி வைத்துக்கொண்டால் எப்போது வேண்டுமானாலும் பிஎப் கணக்கில் பணம் அட்வான்ஸ் எடுக்க முடியும். ஒருவேளை மொத்தமாக வேலையை விட்டு நின்றாலும் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications