ஹைவேயில் உள்ள போர்டு பச்சை நிறத்தில் மட்டுமே இருக்கே.. ஏன் தெரியுமா? சீக்ரெட் மேட்டர் இதுதானாம்
சென்னை: தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது வழிகாட்டி பலகைகளை பார்த்திருப்போம். அந்த போர்டுகள் எல்லாம் பச்சை நிறத்திலும் அதில் எழுதப்பட்டுள்ள ஊர்களின் பெயர் மட்டும் வெள்ளை நிறத்திலும் இருக்கும். ஆனால் அது ஏன் பச்சை நிறத்தில் மட்டும் போர்டுகள் இருக்கிறது என்று யோசித்து இருக்கிறீர்களா? அதற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. அதுபற்றி இங்கு பார்க்கலாம்.
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் போது வழி நெடுக வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டு இருக்கும். எடுத்துக்கட்டாக நெல்லையில் இருந்து சென்னை வருகிறீர்கள் என்றால் மதுரைக்கு எவ்வளவு தூரம் உள்ளது, திருச்சிக்கு எவ்வளவு தூரம் உள்ளது? சென்னைக்கு எவ்வள்வு தூரம் உள்ளது என்று ஆங்காங்கே வழிகாட்டி பலகைகள் இருப்பதை நிச்சயம் பார்த்து இருப்பீர்கள்..

வழிகாட்டி பலகைகள்: இந்த வழிகாட்டி பலகைகள் எல்லாம் சொல்லி வைத்தால் போல பச்சை நிறத்தில் இருக்கும். எழுத்துக்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும். ஏன், வேறு வேறு வண்ணங்களில் வைக்கலாம் தானே.. பச்சை நிறத்தில் மட்டுமே இருக்கிறது என்று யோசித்து இருக்கிறீர்களா.. அதே நேரத்தில் பல இடங்களில் நீல நிறத்திலான வழிகாட்டி பலகைகளும் இருக்கின்றன..
ஏன் பச்சை நிறத்தில் மட்டும்?: ஆனால் தேசிய நெடுஞ்சாலைகளில் பச்சை நிறத்தை மட்டுமே காண முடியும். பச்சை நிறத்தில் மட்டுமே இருப்பதற்கு பின்னால் சில காரணமும் இருப்பதாக நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த நெட்டிசன் ஒருவர் இது தொடர்பாக தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கும் வீடியோவில் தெளிவாக கூறியிருக்கிறார். அவர் கூறிய தகவல் வருமாறு:-
சிவப்பு நிற போர்டு: வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கிய தகவல் என்றால் அதை சிவப்பு நிற போர்டில் வைக்கப்பட்டுள்ளது. அதாவது தவறான ரூட்.. உடனே தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் என்றால் அது சிவப்பு நிறத்தில் வைக்கப்பட்டுள்ளது. சிவப்பு நிறத்தில் இருந்தால் சாலையில் கவனம் செலுத்துவதில் இருந்து sign board -மீது கவனம் செலுத்தும் வகையில் சிவப்பு நிறம் இருக்கும். இதனால், தவறான பாதை அங்கு வழி இல்லை, ஸ்டாப் என்பது போன்ற முக்கிய தகவல் என்றால் சிவப்பு போர்டில் வைக்கிறார்கள்.

கவன சிதறல் ஏற்படாது: அதேபோல, அதி முக்கியம் இல்லாத பொதுவான தகவல் அதாவது, நகரங்களுக்கு செல்லும் தொலைவு போன்றவை பச்சை நிறத்தில் உள்ளது. பச்சை நிறத்தை பொருத்தவரை அமைதியான மற்றும் ஊடுருவாத வண்ணமாக கருதப்படுகிறது. அதாவது, வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதற வைக்காது. எனவே தான் பச்சை நிறத்தில் இத்தகைய குறியீடுகள் இருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல அமெரிக்காவின் அரிசோனா சாலை போக்குவரத்து அமைச்சகம் நடத்திய ஆய்வில், பச்சை நிறம் என்பது சுற்றுப்புறத்தின் வண்ணத்தோடு ஒட்டி இருப்பதால், வாகன ஓட்டிகளுக்கு கவன சிதறல் எற்படாது’ என்று கூறப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் பச்சை நிறத்தில் சைன் போர்டு இருப்பதற்கான காரணம் இதுதானாம்..
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications