வாட்ஸ் ஆப் குழுவில் பெண்களை ஆபாசமாக பேசிய டாக்டர்.. ஸ்டேஷனில் வைத்து விசாரணை நடத்தும் போலீஸ்!
சென்னை: நொளம்பூரில் வாட்ஸ் ஆப் குழுவில் பெண்களை ஆபாசமாக பேசியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தனியார் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை நொளம்பூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மருத்துவர் வேல்முருகன். இவர் அப்பகுதியிலேயே கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்.
மது போதைக்கு அடிமையான இவர் நேற்று முன் தினம் அதிகாலை அளவுக்கு அதிகமான மது அருந்தி விட்டு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள கண்ணாடியை அடித்து நொறுக்கியுள்ளார்.
மேலும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களுக்கான வாட்ஸ் அப் குழுவில் அங்கு குடியிருக்கும் பெண்களை ஆபாசமான வார்த்தையால் திட்டியும், சித்தரித்து பேசியும் அனுப்பியது மட்டுமில்லாமல் அங்கு குடியிருப்பவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து குடியிருப்புவாசிகள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.