தோனி கையில் என்ன அது? உடைந்த சீக்ரெட்! பல வருட கேள்விக்கு பதில் வந்தது! எல்லாத்தையும் கவனிக்கிறாரா?
சென்னை: சிஎஸ்கே கேப்டன் தோனி விமானத்தில் பயணம் செய்யும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிஎஸ்கே கேப்டன் தோனி பொதுவாக சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்க கூடிய நபர் கிடையாது. அவர் ட்விட்டரில் ஒரு காலத்தில் தீவிரமாக போஸ்ட் செய்து வந்தார்.

அதன்பின் அதில் போஸ்ட் செய்வதை அப்படியே நிறுத்தினார். பல ஆண்டுகளாக அவர் ட்விட்டரில் எந்த போஸ்டும் செய்யவில்லை.
கடந்த ஆண்டு அவர் இன்ஸ்டாகிராமில் நிறைய போஸ்டுகளை செய்து வந்தார். அதையும் கடந்த வருடத்தோடு நிறுத்தினார். இப்போதெல்லாம் இஸ்டாவிலும் அவர் எந்த போஸ்டும் செய்வது இல்லை.
அதோடு தோனியின் போன் நம்பர் கிரிக்கெட் வீரர்கள் யாரிடமும் கிடையாது. விராட் கோலி தவிர வேறு யாரிடமும் அவரின் பர்சனல் நம்பர் இல்லை. விராட் கோலியிடம் மட்டுமே அவ்வப்போது இவர் பேசி இருக்கிறார்.
பிசிசிஐ அதிகாரிகளிடம் கூட தோனியின் பர்சனல் எண் இல்லை. இந்தநிலையில் தான் தோனியிடம் பர்சனல் போன் இருக்கிறதா? அவரிடம் ஆண்டிராய்ட் போன் இருக்கிறதா?
அவர் இணையத்திற்கு வருவாரா என்ற கேள்விகள் எழுந்தன. இணையத்தில் நடப்பதை எல்லாம் அவர் பார்க்கிறாரா இல்லையா என்ற கேள்விகள் எழுந்தன. இல்லை ஞானி போல அவர் போனை பயன்படுத்தாமல் இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்தது.
அதோடு அவர் கையில் போன் வைத்து இதுவரை யாருமே பார்த்தது இல்லை. இந்த நிலையில்தான் சிஎஸ்கே கேப்டன் தோனி விமானத்தில் பயணம் செய்யும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதன்படி சிஎஸ்கே போட்டிக்காக விமானத்தில் பயணம் செய்த போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில் தோனி கையில் போன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஒரு பழைய மாடல் ஆண்டிராய்ட் போனை அவர் பயன்படுத்தி வருகிறார்.
இதன் மூலம் அவரிடம் ஆண்டிராய்ட் போன் உள்ளது என்பது தெளிவாகி உள்ளது. பெரும்பாலும் அவர் சமூக வலைத்தளங்களில் நடப்பதையும் வேறு ஒரு கணக்கில் கவனித்து வந்தாலும் கூட வர வாய்ப்புகள் உள்ளன என்று நெட்டிசன்கள் கூறுகின்றன.
சிஎஸ்கே தோனி:
2023 ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. முக்கியமாக சிஎஸ்கே அணி ஆடும் போட்டிகள் அதிக அளவில் கவனம் பெற்றுள்ளன.
தோனியின் கடைசி சீசனாக இது இருக்கலாம் என்பதால் அதை பார்க்க லட்சக்கணக்கில் ரசிகர்கள் வர தொடங்கிவிட்டனர்.
தோனியும்.. எனக்கு பேர்வெல் கொடுக்கிறார்கள்.. நான் என் கெரியரின் கடைசி கால கட்டத்தில் இருக்கிறேன் என்றெல்லாம் க்ளூ கொடுக்க தொடங்கி விட்டார். அதனால் சிஎஸ்கே கேப்டன் தோனி கிட்டத்தட்ட ஓய்வு பெறுகிறார் என்பது கிரிக்கெட் உலகில் வைரல் விவாதமாக மாறிவிட்டது.
அதனால் ரசிகர்கள் அதிக அளவில் மேட்சை பார்க்க வருகிறார்கள். கேப்டன் கூலாக இருக்கும் சிஎஸ்கே கேப்டன் தோனி கடந்த சில போட்டிகளாக களத்திலேயே கோபம் அடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இப்படிப்பட்ட நிலையில்தான் சிஎஸ்கே கேப்டன் தோனி.. உங்கள் கடைசி சீசனில் உங்களுக்கு கொடுக்கப்படும் வரவேற்பை எப்படி பார்க்கிறீர்கள் நேற்று பஞ்சாப் ஆட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு வித்தியாசமாக பதில் அளித்தார்.
அதில்.. நீங்கள்தான் இது என்னுடைய கடைசி சீரிஸ் என்று முடிவு செய்துவிட்டீர்கள். நான் இல்லை என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications