Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீடு இல்லையா? சென்னையில் 35 நவீன தங்குமிடங்கள்..மாநகராட்சியின் அசத்தல் திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் வீடு இல்லாமல் தெருவோரம் தங்கி இருப்பவர்களுக்கு 35 நவீன தங்குமிடங்களை கட்டுவதற்கு சென்னை மாநகராட்சி முடிவு செய்து உள்ளது. தங்குமிடங்கள் கட்டுவதற்கான இடங்களை அடையாளம் காணுமாறு அதிகாரிகளிடம் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கேட்டுக் கொண்டார்.

சென்னையில் உள்ள வீடற்றவர்களுக்கு தற்போது 51 தங்குமிடங்கள் உள்ளன. மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, தங்குமிடங்கள் கட்ட ஒதுக்கப்பட்ட நிதி குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். மேலும் 35 நவீன தங்குமிடங்களை அமைப்பதற்கான இடங்களை அடையாளம் காணுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Dont have a house? Modern Accommodations in Chennai Corporation

திருவொற்றியூர், தொண்டியார்பேட்டை, ராயபுரம், அம்பத்தூர், தேனாம்பேட்டை, வளசரவாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் 11 இடங்களில் தங்குமிடங்கள் அமைக்கப்படும்.

சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார் பேட்டை, ராயபுரம், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு, சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் வீடற்றவர்களுக்கு 24 தங்குமிடங்கள் கட்டுவதற்கான மதிப்பீடுகள் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு ககன்தீப்சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.

அண்ணா நகர், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை ஆகிய மண்டலங்களில் அதிக அளவில் புதிய தங்குமிடங்கள் கட்டப்படுகிறது. 6 மாதங்களில் இந்த தங்குமிடங்கள் கட்டப்படும். இதில் தங்குவதற்காக ஜார்ஜ் டவுன், கோடம்பாக்கம், கோயம்பேடு, மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் ஆகிய இடங்களில் வீடற்றவர்கள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த தங்குமிடங்களில் அவர்களுக்கு இலவச சேவைகள் அறிவிக்கப்படும் எனவும் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய நகர் நல அலுவலர் ஜெகதீசன், ஆறு மாதங்களில் புதிய நிழற்குடைகள் கட்டப்படும். ஜார்ஜ் டவுன், கோடம்பாக்கம், கோயம்பேடு, மெரினா பீச், பெசன்ட் நகர் போன்ற பகுதிகளில் வீடற்றவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எங்களிடம் 55 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்குமிடங்களை நடத்தி வருகின்றன. 1,600க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்கியுள்ளனர் என்று கூறினார்.

நகரின் அனைத்து மண்டலங்களிலும் நவீன தங்குமிடங்களின் அவசியத்தை வலியுறுத்திய டாக்டர் ஜெகதீசன், நகரின் 15 மண்டலங்களில் உள்ள வீடற்ற நபர்களின் மற்றொரு கணக்கெடுப்பை மேற்கொள்ள மாநகராட்சி முன்மொழிந்துள்ளது என்றார். முந்தைய கணக்கெடுப்பு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 9,000 க்கும் மேற்பட்ட வீடற்றவர்கள் கண்டறியப்பட்டது. "இந்த தங்குமிடங்கள் குறுகிய தங்குமிடங்களாக இருக்கும், அவை இலவசமாக சேவைகளை வழங்கும் என்றும் அவர் கூறினார்.

பொதுவாக, பெண்கள் ஆறு மாதங்கள் தங்குமிடங்களில் தங்க அனுமதிக்கப்படுகிறார்கள். வீடற்றவர்களில் பலர் காவல்துறையினர் உத்தரவுடன் தங்குமிடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். குடிமை அமைப்பு, தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஆதரவுடன், வீடற்றவர்களை மீட்கிறது. பெண்களுக்கான 1091, 181 போன்ற ஹெல்ப்லைன் எண்கள் மற்றும் கார்ப்பரேஷன் ஹெல்ப்லைன் 1913 ஆகியவை வீடற்றவர்களை மீட்பதற்கான சில வசதிகள் ஆகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+