ரொம்ப யோசிக்க வேண்டாம்.. நல்லதே நடக்கும்.. பராசக்தி பரபரப்புக்கு நடுவே.. சிவகார்த்திகேயன் கூல் பேச்சு
திருச்சி: விஜய்யின் ஜனநாயகன் படத்தை போன்றே பராசக்தி படத்திற்கும் தணிக்கை சான்றிதழ் தற்போது வரை வழங்கப்படாத நிலையில் படம் ரிலீஸ் ஆகுமா என கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் ரொம்ப யோசிக்க வேண்டாம்.. நல்லதே நடக்கும்.. என சிவகார்த்திகேயன் பேசிய வீடியோ டிரெண்ட் ஆகி வருகிறது.
பராசக்தி திரைப்படம் வரும் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், மோகன் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா நடிபில் சுதா கொங்கரா இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.

படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில் படத்திற்கு இன்னமும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் ஜனநாயகன் படம் போல பராசக்தி படமும் வெளியாகுமா? என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் நல்லதே நடக்கும்.. ரொம்ப யோசிக்க வேண்டாம் என சிவகார்த்திகேயன் பேசியுள்ளது.
திருச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது:- இந்த படம் என்ன பேசுகின்றது என்பது தான் ரொம்ப ரொம்ப முக்கியம். இந்த படம் பண்றதுக்கு மிக முக்கியமான காரணம் இந்த கதை உண்மை சம்பவங்களின் அடிப்படையானது. நம்ம மொழிக்காக.. நம்ம மண்ணுக்காக.. தமிழுக்காக உயிரை விட்ட நிறைய பேர் அவங்களுடைய முயற்சி என்ன? தியாகம் என்ன? என்பதை அவங்களுக்கு வணக்கம் சொல்கிறது மாதிரியான படம் தான் இந்த படம்.
இப்படிப்பட்ட கதை இருப்பதனால் தான் இவ்வளவு பெரிய நடிகர்கள் எல்லாரும் இதற்கு ஒத்துக்கொண்டனர். எல்லாரும் சேர்ந்தே ஓடுவோம், சேர்ந்தே ஜெயிப்போம்.. என்ன கவலை இருந்தாலும் ரொம்ப யோசிக்க வேண்டாம்.. நல்லதே நடக்கும்.. நல்லதே நடக்கும். நல்லதே நடக்கும்.. என்று கூறினார்.
அப்போது சிவகார்த்திகேயன், ரஜினிகாந்தின் டயலாக்கான பராசக்தி ஹீரோ டா என்ற டயலாக்கையும் பேசினார். பேரை கேட்டதும் சும்மா அதிருதுல்லா.. என்றும் ரஜினி வாய்சில் மிமிக்ரி செய்தார். இந்த நிலையில் வரும் 10 ஆம் தேதி திரையரங்குகளில் படம் ரிலீஸ் ஆகும் என டான் பிக்சர்ஸ் மீண்டும் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications