ஒரே கல்லில் டபுள் மாங்காய்! திமுகவினரை குஷியில் ஆழ்த்திய 'ரீஃபண்ட்' பிளான்! இன்று முதல் விருப்ப மனு
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு விநியோகம் குறித்த முக்கிய அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.. அதன்படி இன்று முதல் அதாவது பிப்ரவரி 20-ம் தேதி முதல் திமுகவில் விருப்ப மனு விநியோகம் துவங்கப்பட்டுள்ளது..
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சட்டசபை தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தனது ஐந்தாண்டு கால ஆட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்யும் நிலையில், "மீண்டும் திமுக" என்ற ஒற்றை இலக்குடன் தேர்தல் பணிகளில் பாய்ந்து வருகிறது..

திமுக கூட்டணி
தமிழக அரசியலில் தற்போது நிலவும் கூட்டணி குழப்பங்கள், தொகுதிப் பங்கீடு குறித்த எதிர்பார்ப்புகள் என அனைத்தும் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ள சூழலில், திமுக தனது தேர்தல் வியூகத்தின் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது..
குறிப்பாக, மண்டல வாரியாக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடுகளை நடத்தி முடித்துள்ள அக்கட்சி, அடுத்ததாக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு மற்றும் கூட்டணிப் பேச்சுவார்த்தை குழு என அடுத்தடுத்த நகர்வுகளால் அரசியல் களத்தை அதிரவைத்து வருகிறது..
தொகுதி பங்கீடு
கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பேசுவதற்கு மூத்த தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.. இந்த ஆலோசனையின் முடிவில், பிப்ரவரி 22-ம் தேதி முதல் கூட்டணி கட்சிகளுடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..
இப்படி ஒருபுறம் கூட்டணிக் கணக்குகள் அனல் பறந்து கொண்டிருக்கும் வேளையில், திமுக சார்பில் போட்டியிடத் துடிக்கும் உடன்பிறப்புகளுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் வேட்பாளர் விருப்பமனு குறித்த அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிரடியாக வெளியிட்டுள்ளார்..
இன்று வெள்ளிக்கிழமை முதல் மார்ச் 2-ம் தேதி திங்கட்கிழமை வரை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் விருப்பமனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஏற்கனவே மண்டல வாரியாக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடுகள் நடத்தப்பட்டு வரும் சூழலில், தற்போது வேட்பாளர் தேர்வுக்கான முதல் கட்டமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது..
விருப்ப மனு இன்று முதல்
தேர்தலில் போட்டியிட விரும்பும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் குறிப்பிட்ட தொகையை கட்டணமாக செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.. இந்த முறை பொதுத் தொகுதிகளில் போட்டியிட விரும்புவோருக்கு விண்ணப்பக் கட்டணமாக 25 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது..
அதேபோல் மகளிர் மற்றும் தனித் தொகுதிகளில் போட்டியிட விரும்புவோருக்கு 15 ஆயிரம் ரூபாய் கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.. விருப்பமனு படிவத்தைப் பெறுவதற்கு தனியாக 1000 ரூபாய் செலுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது..
கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் பிப்ரவரி 22-ம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில், ஒருவேளை ஒரு உறுப்பினர் விண்ணப்பித்த தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டால், அவர் செலுத்திய விண்ணப்பக் கட்டணம் பின்னர் முறைப்படி திருப்பி அளிக்கப்படும் என்றும் துரைமுருகன் தனது அறிவிப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்..
காசு திரும்ப வரும் - ரீபண்டு முறை
திமுக தரப்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு ஏற்கனவே அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.. இதனைத் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தைக்கான குழுவும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.. முதல்வர் ஸ்டாலின் 2 நாட்களுக்கு முன்பு மூத்த தலைவர்களுடன் நடத்திய ஆலோசனையின் தொடர்ச்சியாகவே இந்த விருப்பமனு விநியோக அறிவிப்பு வெளியாகி உள்ளது..
தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுகவின் இந்த அறிவிப்பு அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.. விருப்பமனு தாக்கல் செய்ய பத்து நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
-
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
என்கிட்டயே அழுது சீன் போடுறீயா? நான் என்ன கல்லா.. டிஆர் பாலுவை முற்றுகையிட்ட எஸ்ஆர் ராஜா ஆதரவாளர்கள் -
’கதாநாயகன்' திமுகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது.. மகளிருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறதா? -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் இறுதியானது.. திமுக தலைமையகத்தில் சுதீஷ் சொன்ன சேதி! -
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
Election Exclusive: வசூல்ராஜா ஹீரோவுக்கு 0..காமெடியன் கருணாஸூக்கு 1! அரசியலின் இன்னொரு மதிமுக மநீம? வைகோ 2.0 கமல்ஹாசன்? -
OPS: விருப்ப மனு கொடுத்தும் சீட் கிடைக்கலையே.. திடீரென அண்ணா அறிவாலயம் வந்த ஓபிஎஸ் மகன்! -
கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த வேலுமணி.. அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்! -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
கோவை திமுகவை துரத்தும் 25 வருட தோல்வி.. செந்தில்பாலாஜி மூலம் மாறுமா களம்.. ஸ்டாலின் பிளானின் பின்னணி












Click it and Unblock the Notifications