பொன்முட்டையிடும் வாத்தை அறுப்பதா? எல்.ஐ.சி பங்குகள் விற்பனைக்கு ராமதாஸ் கடும் எதிர்ப்பு
சென்னை: எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 2020-2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது, எல்.ஐ.சி. நிறுவனத்தில் மத்திய அரசின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய இருப்பதாக நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில். எல்.ஐ.சி. பங்குகளை IPO மூலம் பங்கு சந்தைகள் வழியாக தனியாருக்கு விற்பனை செய்வது மிகவும் ஆபத்தானது. இது பொன்முட்டையிடும் வாத்தை அறுப்பதற்கு சமமானது. இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என கூறியுள்ளார்.
எல்.ஐ.சி. பங்குகளை IPO மூலம் பங்கு சந்தைகள் வழியாக தனியாருக்கு விற்பனை செய்வது மிகவும் ஆபத்தானது. இது பொன்முட்டையிடும் வாத்தை அறுப்பதற்கு சமமானது. இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்!
— Dr S RAMADOSS (@drramadoss) February 1, 2020
வருமான வரி உச்சவரம்பு
மேலும் வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படாதது ஏமாற்றமளிக்கிறது. அதேநேரத்தில் வரிவிகித படிநிலைகள் அதிகரிக்கப்பட்டிருப்பதும், வரிவிகிதம் குறைக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது என்றும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications