முதல் ஆளாக கேசிஆருக்கு வாழ்த்து சொன்ன ராமதாஸ்.. ஏன், எதற்காக?
சென்னை: வர வர பாமக நிறுவனர் ராம்தாஸ் என்ன செய்கிறார், என்ன நினைக்கிறார் என்றே தெரியவில்லை.
கூடிய சீக்கிரம் தேர்தல் வரப்போகிறது. அதற்காக எல்லா கட்சிகளும் தங்களை ஆயத்தப்படுத்தி வருகிறார்கள். இதற்கான கூட்டணிக்கும் தயாராகி அதற்கான தூது வேலைகளும் நடந்து வருகின்றன.
இதில் பாமகவும் தேர்தலுக்கு போட்டியிட போகிறது. கூட்டணி வைத்துதான் போட்டியிட போகிறோம் என்று கறாராக சொல்லிவிட்டாலும், யாருடன் கூட்டணி என்று இதுவரை அறிவிக்கப்படாமலேயே உள்ளது.

குழப்பி உள்ளார்
கூட்டணியில் திமுக இல்லை என்பது தெரிந்துவிட்ட நிலையில், மற்றவர்களுடன் தன் நிலைப்பாட்டை இன்னும் பாமக சொல்லவில்லை. எனவே கூட்டணி வியூகம் அமைப்பதற்கான முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று ஒரு ட்வீட்டை போட்டு எல்லோரையுமே குழப்பி இருந்தார் ராமதாஸ்.
|
விளங்க முடியாத ட்வீட்
"பேரிக்காய் பழுக்கும் வரை காத்திருக்க மனமில்லாத ஒருவன் தினமும் மரத்தையே பார்த்துகொண்டிருந்தான்.அவன் கட்டாயப்படுத்தி பழுக்க வைக்க முயன்றால் பழம், மரம் இரண்டும் நாசமாகி விடும்.பொறுமையுடன் காத்திருந்தால் பழுத்த பழம் அவனது மடியில் விழும்! - ஆப்ரஹாம் லிங்கன், அமெரிக்க முன்னாள் அதிபர்." என்று பதிவிட்டார். இவர் யாரை சொல்கிறார், எதை சொல்கிறார், என்ன சொல்கிறார் என்றே புரியாமல் இருந்தது.

ராமதாஸ் அறிக்கை
இந்தநிலையில், தெலுங்கானாவில் பெரு வெற்றி பெற்ற சந்திரசேகர ராவுக்கு வாழ்த்து சொல்லி உள்ளார். இது சம்பந்தமாக ஒரு அறிக்கையைம் ராமதாஸ் விடுத்துள்ளார். பாஜகவுடன் ரொம்பவும் தனது எதிர்ப்பை காட்டவில்லை என்றாலும் கொஞ்சமாவது ஒட்டிக் கொண்டுதான் உள்ளது பாமக.

சிக்னல் காட்டுகிறாரா?
ஆனால் சந்திர சேகரராவோ பாஜகவையே தோற்கடித்தவர். அவருக்கு இப்போது ராமதாஸ் வாழ்த்து சொல்லி இருக்கிறார் என்றால் இதன் அர்த்தம் என்னவென்று தெரியாமல் உள்ளது. அப்படியானால் பாஜகவுக்கு எதிராக ராமதாஸ் காய் நகர்த்துகிறாரா? அல்லது பெரும்பன்மையாக காங்கிரஸ் வெற்றி பெற்றுவிட்டதால், ராகுலுடன் இணைய சிக்னல் காட்டுகிறாரா என்று தெரியவில்லை.

அர்த்தம் என்ன?
ஏற்கனவே பேரிக்காய் பழம் ட்வீட்டுக்கு இன்னும் விடையே கிடைக்காத நிலையில், சந்திரசேகரராவிற்கு வாழ்த்து சொன்னதன் அர்த்தம் புரியவே இல்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications