தமிழ்நாட்டில் ரூ5,000 லஞ்சம் கொடுத்தால் போலி MBC சாதி சான்றிதழ்: டாக்டர் ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு
சென்னை: தமிழ்நாட்டில் ரூ5,000 லஞ்சம் கொடுத்தாலே போலியான மிகப் பிற்படுத்தப்பட்டோர் (MBC) ஜாதி சான்றிதழ் வழங்கப்படும் அவலம் இருக்கிறது என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள சாதிகளின் பெயர்களில் போலியான சாதிச் சான்றிதழ்களைப் பெறுவது இப்போது அதிகரித்து விட்டது. அதற்காகவே உள்ள தரகர்களிடம் ரூ.5000 கொடுத்தால் போதும். உடனடியாக நீங்கள் கேட்கும் சாதிச் சான்றிதழ் கிடைத்து விடும்.
அது நடக்குதுங்க... நல்லா நடக்குதுங்க! தமிழ்நாட்டில் போலியான சாதிச் சான்றிதழ்களை பணம் கொடுத்து வாங்கி, இட ஒதுக்கீட்டுக்கு தகுதியற்றவர்களும், இட ஒதுக்கீட்டை அனுபவிக்கும் கொடுமை நடக்குதுங்க... நல்லா நடக்குதுங்க. இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
எம்.பி.சி சாதிச்சான்றிதழ் வேண்டுமா?
— Dr S RAMADOSS (@drramadoss) September 19, 2023
ரூ.5000 இருந்தால் போதுமானது
தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள சாதிகளின் பெயர்களில் போலியான சாதிச் சான்றிதழ்களைப் பெறுவது இப்போது அதிகரித்து விட்டது. அதற்காகவே உள்ள தரகர்களிடம் ரூ.5000 கொடுத்தால் போதும். உடனடியாக நீங்கள்…












Click it and Unblock the Notifications