தியாகத்தின் பெருமையை போற்றும் பக்ரீத் திருநாள் - டாக்டர் ராமதாஸ், டிடிவி தினகரன் வாழ்த்து
பக்ரித் தியாகத்தை மட்டுமின்றி, ஈகை, மனித நேயம், நல்லுறவு, மாற்றுத் திறனாளிகள் மீதான அன்பு ஆகியவற்றையும்
சென்னை: இறைவனுக்காக மகனையே பலியிடத் துணியும் அளவுக்கு இஸ்லாமியர்களுக்கு இறைபக்தி உண்டு என்பதையே இந்த திருவிழா நினைவூட்டுகிறது. அவ்வளவு இறைபக்தி கொண்ட இஸ்லாமியர்கள் இந்த ஆண்டு தங்களின் புனிதக் கடமைகளில் ஒன்றான ஹஜ் பயணத்தைக் கூட மேற்கொள்ள முடியாத அளவுக்கு கொரோனா வைரஸ் தடுத்து விட்டது. கொரோனா வைரஸ் துயரம் விரைவில் தீர வேண்டும். இஸ்லாமியர்கள் புனிதக்கடமைகளை நிறைவேற்றுவதில் உள்ள அனைத்து தடைகளும் விலக வேண்டும் டாக்டர் ராமதாஸ் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இஸ்லாமிய பெருமக்களுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் தியாக திருநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர். டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

தியாகத்தைப் போற்றும் புனிதத் திருநாளான பக்ரீத் திருநாளை உலகம் முழுவதும் கொண்டாடும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இஸ்லாமியர்களின் ஐந்து புனிதக்கடமைகளில் ஒன்று மெக்கா நகருக்கு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வது ஆகும். இந்தக் கடமையின் ஓர் அங்கமாக ஹஜ் மாதம் 10ஆம் நாள் சிறப்புத் தொழுகை நடத்தி, அதன் முடிவில் இறைவனுக்காக ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலியிடுவதை இஸ்லாமிய மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதற்கான நடைமுறைகளில் பல பாடங்கள் அடங்கியுள்ளன.
பக்ரீத் தியாகத்தை மட்டுமின்றி, ஈகை, மனித நேயம், நல்லுறவு, மாற்றுத் திறனாளிகள் மீதான அன்பு ஆகியவற்றையும் வலியுறுத்துகிறது. அந்த வகையில் இது மனிதநேயத் திருவிழாவும் ஆகும்.இறைவனுக்காக மகனையே பலியிடத் துணியும் அளவுக்கு இஸ்லாமியர்களுக்கு இறைபக்தி உண்டு என்பதையே இந்த திருவிழா நினைவூட்டுகிறது. அவ்வளவு இறைபக்தி கொண்ட இஸ்லாமியர்கள் இந்த ஆண்டு தங்களின் புனிதக் கடமைகளில் ஒன்றான ஹஜ் பயணத்தைக் கூட மேற்கொள்ள முடியாத அளவுக்கு கொரோனா வைரஸ் தடுத்து விட்டது. கொரோனா வைரஸ் துயரம் விரைவில் தீர வேண்டும்.
இஸ்லாமியர்கள் புனிதக்கடமைகளை நிறைவேற்றுவதில் உள்ள அனைத்து தடைகளும் விலக வேண்டும். பக்ரித் திருநாள் சொல்லும் பாடங்களை அனைத்து மக்களும் கடைபிடிக்க வேண்டும். சகோதரத்துவம், அன்பு, நல்லிணக்கம், ஈகை, மாற்றுத்திறனாளிகள் மீதான அக்கறை என்றும் நீடிக்க வேண்டும்; நல்ல மனம் கொண்ட மக்களுக்கு எல்லா நலமும், வளமும் கிடைக்க வேண்டும் என மீண்டும் வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
டிடிவி தினகரன் வாழ்த்து

இதே போல அமமுக தலைவர் டிடிவி தினகரன் தனது வாழ்த்துச் செய்தியில் தியாகத்தின் பெருமையைப் போற்றும் திருநாளான பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். தனக்கென வாழாத தியாகத்தின் சிறப்பும் வலிமையும் மற்ற எல்லாவற்றையும் விட பெரியது. அதனை மனதில் கொண்டு இந்த நல்ல நாளில் பசித்தவர்களுக்கு உணவும், துன்பப்படுபவர்களுக்கு உதவியும் எளியவர்களிடம் கருணையும் காட்ட வேண்டும் என்றும் தனது வாழ்த்து செய்தியில் கூறயுள்ளார் டிடிவி தினகரன்.

-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications