நல்லது செய்தால் அது வீணாகாது.. ராமதாஸின் இன்றைய கருத்து.. அது யாருக்கு?!
சென்னை: "நீ நல்லது செய்தால் அது ஒரு போதும் வீணாகாது" என்று டாக்டர் ராமதாஸ் ட்வீட் போட்டு கருத்து சொல்லி உள்ளார்.
7+1 வாங்கினதில் இருந்தே பாமக நிறுவனர் ராமதாசிடம் இருந்து ஒரே பாசிடிவ் செய்திகள்தான் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

நேற்று பிரதமர் மோடியை பார்த்த தெம்பில் இன்று உற்சாக ட்வீட் ஒன்று பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:
"ஒரு மரம் அதன் கனியால் அறியப்படுகிறது; ஒரு மனிதன் அவனின் செயல்களால் அறியப்படுகிறான். நீ செய்த நல்ல செயல் ஒருபோதும் வீண் போகாது; மரியாதையை விதைத்தவன் நட்பை அறுவடை செய்வான், கருணையை நட்டவன் அன்பை சேகரிப்பான்!- புனித பெரிய பசீலியார்" என்று பதிவிட்டுள்ளார்.
ஒரு மரம் அதன் கனியால் அறியப்படுகிறது; ஒரு மனிதன் அவனின் செயல்களால் அறியப்படுகிறான். நீ செய்த நல்ல செயல் ஒருபோதும் வீண் போகாது; மரியாதையை விதைத்தவன் நட்பை அறுவடை செய்வான், கருணையை நட்டவன் அன்பை சேகரிப்பான்!
— Dr S RAMADOSS (@drramadoss) March 7, 2019
- புனித பெரிய பசீலியார்
வழக்கம்போல்தான் ஒரு சந்தேகம்.. இதில் ராமதாஸ் யாரை சொல்கிறார்? இவ்வளவு காலம் நல்ல செயல்களை பாமக செய்திருக்கிறது, அதனால் அதன் பலனை கூட்டணி மூலம் வரும் தேர்தலில் அறுவடை செய்ய போகிறது என்று ராமதாஸ் சொல்கிறாரா அல்லது கூட்டணியில் இடம் கிடைக்காமல் தவிக்கும் விஜயகாந்த், அன்று மக்களுக்கு கண்ணுக்கு தெரியாமல் எத்தனையோ பல நல்ல செயல்களை செய்திருப்பதால், அது வீண்போகாது என்று நம்பிக்கை தருகிறாரா என்றுதான் தெரியவில்லை.
யார் நல்லது செய்தால் நமக்கென்ன... நம்ம பொழப்பு நல்லா இருந்தா சரித்தான் என்று மக்களின் மைண்ட் வாய்ஸை கேட்க முடிகிறது.












Click it and Unblock the Notifications