சென்னையில் பொதுமக்கள் ஒத்துழைப்பு 2 வாரங்கள் தொடர்ந்தால் கொரோனாவை ஒழித்துவிடலாம்- டாக்டர் ராமதாஸ்
சென்னை: கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட லாக்டவுனால் சென்னையில் 3-வது நாளாக சாலைகளில் காக்கா, குருவிகளைக் கூட காணவில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:
அரசாங்கத்தின் ஆதரவுடன் முழு அடைப்பு நடத்தினால் கூட, இல்லாத அளவுக்கு சென்னை இன்று முடங்கிக் கிடக்கிறது. மூன்றாவது நாளாக இன்றும் சாலைகளில் காக்கா, குருவிகளைக் கூட காணவில்லை.
கொரோனா ஒழிப்புக்கான பணிகளை இப்போது மக்களே முன்னெடுக்கிறார்கள். பாராட்டுகள்! சென்னையில் இதற்கு முன் நடைமுறையில் இருந்த 4 ஊரடங்குகளிலும் இதே ஒத்துழைப்பு கிடைத்திருந்தால் சென்னையில் இன்று கொரோனா இருந்திருக்காது.
இப்போது கிடைக்கும் ஒத்துழைப்பு இன்னும் இரு வாரங்களுக்கு தொடரட்டும். அவ்வாறு தொடர்ந்தால் கொரோனா வைரசை ஒழித்து விடலாம்!
சீனாவின் நரி தந்திரம்.. லடாக்கில் அந்த ஒரு இடத்திற்கு மீண்டும் குறி வைத்த பிஎல்ஏ.. அம்பலமான திட்டம்!
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.