தீரனுக்காக உருக்கம்...வேல்முருகனுக்காக ஏக்கம்... பாமகவினரை நெகிழ வைக்கும் டாக்டர் ராமதாஸ்
Recommended Video

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமது முத்துவிழாவுக்கான ஏற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சியில் பேசிய பேச்சுகள் அக்கட்சி தொண்டர்களிடையே புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாமக தொடங்கப்பட்டதில் இருந்து வன்னியர் அல்லாத பல சமூகத்தினருக்கு கட்சிப் பதவிகள், மத்திய அமைச்சர்கள் பதவிகளை வழங்கியிருக்கிறார் டாக்டர் ராமதாஸ். ஆனாலும் அவர்கள் ராமதாஸுடன் முரண்பட்டு தனிக் கட்சி தொடங்கி இருக்கின்றனர்.
வேறு கட்சிகளுக்கு தாவியும் இருக்கின்றனர். பலரும் அரசியலைவிட்டே ஒதுங்கியும் இருக்கின்றனர். ஜாதி, மதங்களைப் பார்க்காமல் பாமகவை அனைவருக்குமான ஒரு பொதுவான கட்சியாகத்தான் பல ஆண்டுகாலம் கட்டிக்காத்து வந்தார் ராமதாஸ்.

பாமக மீது விமர்சனம்
அதனை மேடைகளில் பேசுவதுடன் மட்டும் நிற்காமல் கட்சி கட்டமைப்பு, அரசியல் அதிகாரம் தருவதிலும் செயல்படுத்திக் காட்டினார். ஒருகட்டத்தில் பாமகவின் திசைவழிப் பயணம் வேறாக கடுமையாக விமர்சனங்களுக்குள்ளானது.

முத்து விழா வாழ்த்துகள்
அதனாலும் பாமக பிளவுகளை எதிர்கொண்டது. இந்த நிலையில் டாக்டர் ராமதாஸின் 80-வது முத்துவிழா சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. அனைத்து கட்சித் தலைவர்களும் டாக்டர் ராமதாஸுக்கு வாழ்த்து தெரிவித்தது அரசியல் பண்பாட்டை வெளிப்படுத்தியிருந்தது.

கண்கலங்கிய தீரன்
மேலும் முத்து விழா நிகழ்ச்சியில் பேசுகையில் பேராசிரியர் தீரன் தொடர்பாக நெகிழ்ச்சியுடன் பேசினார் டாக்டர் ராமதாஸ். காலம் நம்மை பிரித்துவிட்டது என மேடையில் இருந்த தீரனை நோக்கி ராமதாஸ் குறிப்பிட அவரும் கண்கலங்கினார்.

வேல்முருகனை இணைக்க விருப்பம்
இதேபோல் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனையும் தம் பக்கம் மீண்டும் கொண்டுவந்து பாமகவை மிக வலிமையான ஒரு கட்சியாக மீண்டும் கட்டமைத்தாக வேண்டும் என்கிற விருப்பத்தை டாக்டர் ராமதாஸ் தமது சகாக்களிடம் வெளிப்படுத்தியிருக்கிறார். இருப்பினும் சிலரது எதிர்பார்ப்பால் இந்த முயற்சிகள் தடைபட்டு நிற்கின்றனவாம்.

எதிர்பார்ப்புகள் ஏராளம்
இத்தகைய தகவல்கள் பரவியதால் அண்மைக்காலமாக பாமகவினர் மீதான வேல்முருகன் கட்சியினரின் விமர்சனங்கள் சற்றே குறைந்தும் இருக்கிறது. இந்த அடுத்தடுத்த நிகழ்வுகள் வடதமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பபை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications