இனி குடிநீர் வரி ரொக்கமாக ஏற்கப்படாது.. ஆன்லைன், யு.பி.ஐ பேமெண்ட் மட்டுமே? எப்படி செலுத்துவது?
சென்னை: இன்று முதல் குடிநீர் வரி ரொக்கமாக ஏற்கப்படாது என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் இந்த மாற்றம் தொடர்பான அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தற்போது குடிநீர் வரி அளிப்பதற்கு பணிமனை அலுவலகங்களில் தனி அறைகள் செயல்பட்டு வருகின்றன. நமக்கு வர கூடிய குடிநீர் வரி அளவை பொறுத்து நேரடியாக சென்று இந்த அலுவலகங்களில் கட்டணம் செலுத்த முடியும்.

இந்த நிலையில்தான் பணிமனை அலுவலகங்களில் தற்போது செயல்பட்டு வரும் வசூல் மையங்கள் அக்.1 முதல் செயல்படாது. முன்பெல்லாம் இங்கே வரிசையில் காத்திருந்து பணம் செலுத்த வேண்டும். இதை தடுக்கும் விதமாக : இன்று முதல் குடிநீர் வரி ரொக்கமாக ஏற்கப்படாது என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
டிஜிட்டல் கட்டண முறையை ஊக்கவிக்கவும், வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கவும் சென்னை குடிநீர் வாரியத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இங்கே டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த வகைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
டிஜிட்டல் மயம்: தமிழ்நாட்டில் அரசு சார்ந்த துறைகள் பலவும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. மக்களுக்கு வழங்கப்படும் அடிப்படை சேவைகள் பல டிஜிட்டல் மயமாகிக்கொண்டு இருக்கிறது.
அந்த வகையில் சமீபத்தில்தான் தமிழ்நாட்டில் உள்ள கிராம ஊராட்சிகளில் சேவைகள் டிஜிட்டல் மயமாகி உள்ளன. அதன்படி பொது மக்கள் செலுத்தும் அனைத்து விதமான வரிகளும் ஆன்லைன் மூலமாக பெறப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. பொதுமக்கள் போன் மூலம் யுபிஐ வைத்து பணம் செலுத்த முடியும். இப்போது கிட்டத்தட்ட எல்லோரிடமும் ஸ்மார்ட் போன் உள்ளது.
அதை வைத்து பணம் செலுத்த முடியும். இல்லையென்றால் டெபிட் கார்ட் மூலமாகவும் பணத்தை இனி கிராம பஞ்சாயத்துகளில் செலுத்த முடியும். இந்த புதிய முறை மூலம் நாளை முதல் ஆன்லைன் மூலமாக கட்டணம் பெறப்படும் என்று தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.இதன் மூலம் அரசுக்கு செலுத்தப்படும் பணம் பஞ்சாயத்து அளவில் திருடப்படாமல் நேரடியாக அரசின் கஜானாவிற்கு செல்லும். இதனால் பஞ்சாயத்துகளில் முறைகேடுகள் தவிர்க்கப்படும்.
சமீபத்தில் ரேஷன் கடைகளிலும் இதே போல ஆன்லைன் கட்டணம் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது பணமாக செலுத்தாமல் யுபிஐ மூலம் செலுத்த வேண்டும். ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் மானிய விலையில் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த மூன்று மாதங்களில் இந்த விநியோக முறையில் சில மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சுமார் 2.2 கோடி குடும்ப அட்டைகள் இருக்கிறது. இதன் மூலம் சுமார் 7 கோடி பேர் பயனடைகிறார்கள். எல்லோருக்கும் இந்த புதிய வசதி கொண்டு வரப்படும். அரசின் குறிப்பிட்ட துறைகளில் உள்ள கஜானாவிற்கு நேரடியாக பணம் செல்ல இந்த புதிய முறை அமலுக்கு வருகிறது. மின்சார கட்டணம் ரூபாய் 1000 அல்லது 2000 மேல் வந்தால் ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டணத்தை கட்டும் முறையை கொண்டு வர தமிழ்நாடு மின்சார வாரியம் பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications