வருதப்பா வருதப்பா காவிரி தண்ணீர் வருதப்பா.. ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் வருதப்பா
Recommended Video
சென்னை: ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில்கள் மூலம் குடிநீர் செல்லும் சோதனை ஓட்டம் இன்று இன்று நடைபெறுகிறது.
சென்னையில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில்கள் மூலம் காவிரி கூட்டுக் குடிநீரை கொண்டு செல்ல தமிழக அரசு முடிவு செய்ததுள்ளது. , இத்திட்டத்திற்கு ரூ.65 கோடிநிதியை தமிழக முதல்வர் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்.

இந்த பணிகள் அறிவிக்கப்பட்டதில் இருந்தே தீவிரமாக நடந்து வந்தது. தற்போது 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. இதனால் திட்டமிட்டப்படி சோதனை ஓட்டம் இன்று (9-ம் தேதி) நடைபெறுகிறது.
இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நேற்று கூறுகையில் "ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில்வே வேகன்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்பட உள்ளது. ஊழியர்களின் கூட்டு முயற்சியால் 95 சதவீதம் பணிகள் முடிந்துவிட்டது. மேட்டு சக்கரகுப்பம் பகுதியில் இருந்து பார்ச்சம்பேட்டை வரை குழாய் புதைக்கும் பணி நடந்துவீட்டது. மேலும் மேட்டு சக்கரகுப்பம் பகுதியில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீரை ஏற்ற அங்கு பைப்லைன்கள் மற்றும் வால்வுகள் அமைக்கும் பணிகளும் முடிவடைந்துவிட்டது என்றனர்.
இதனால் நேற்று இரவே மேட்டூரில் இருந்து கொண்டு வரப்படும் காவிரி கூட்டுக் குடிநீரை மேட்டு சக்கரக்குப்பம் பகுதியில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியில் பம்பிங் செய்து சேமித்து வைக்க தொடங்கி உள்ளார்கள். இந்த தண்ணீர் பார்ச்சம்பேட்டைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து 5-வது நடைமேடையில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு கொண்டு சென்று அங்கு பொருத்தப்பட்டுள்ள குழாய்கள் மூலம் ரயில்வே வேகன்களில் இன்று நிரப்பப்படுகிறது. திட்டமிட்டபடி ஜூலை 10-ம் தேதி முதல் சென்னைக்கு ரயில்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications