ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடர் கேன்சரை உருவாக்குகிறதா? பகீர் புகார்.. அதிகாரிகள் ஆய்வு!
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் பவுடர் உள்ளிட்ட பொருட்களில் கேன்சரை உருவாக்கும் மூலக்கூறுகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை: ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் பவுடர் உள்ளிட்ட பொருட்களில் கேன்சரை உருவாக்கும் மூலக்கூறுகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு உலகம் முழுக்க பல கோடி கஸ்டமர்கள் இருக்கிறார்கள். முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான அத்தியாவசிய பொருட்களை இவர்கள் உருவாக்கி விற்பனை செய்து வருகிறார்கள்.
பவுடர், சோப், ஷாம்பு என்று மிக அத்தியாவசியமான பொருட்களை இவர்கள் உருவாக்கி விற்பனை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் இவர்களின் நிறுவனத்திற்கு எதிராக மிகப்பெரிய குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

என்ன குற்றச்சாட்டு
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் பவுடர் உள்ளிட்ட பொருட்களில் கேன்சரை உருவாக்கும் மூலக்கூறுகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில ஆங்கில ஊடகங்கள் இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் கட்டுரைகளை வெளியிட்டது. இதனால் பாதிக்கப்பட்ட சிலரின் பேட்டியும் அந்த கட்டுரைகளில் இருந்தது.

பல இடங்களில் சோதனை
இந்த நிலையில் மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு இந்தியா முழுக்க பல இடங்களில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தயாரிப்புகளை சோதனை செய்தது. 100 விதமான இடங்களில் பல்வேறு விதமான பொருட்களை சோதனை செய்து வருகிறது. தயாரிப்பு கூடம் , விற்பனை கூடம் என்று பல இடங்களில் இது தொடர்பாக சோதனை நடத்தி வருகிறார்கள்.

ஏன் சோதனை
ஆனால் இந்த சோதனை இந்த குற்றச்சாட்டு காரணமாகத்தான் நடக்கிறது என்று கூறப்படவில்லை. எதன் காரணமாக இந்த சோதனை நடத்தப்படுகிறது என்று விளக்கம் அளிக்கப்படவில்லை. இப்போது இது தொடர்பாக எந்த விதமான கருத்தும் தெரிவிக்க முடியாது என்று மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

ஜான்சன் அண்ட் ஜான்சன்
அதேபோல் ஜான்சன் அண்ட் ஜான்சன் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறது. இது தொடர்பாக வரும் செய்திகள் எல்லாம் பொய்யானவை, ஜோடிக்கப்பட்டவை என்று ஜான்சன் அண்ட் ஜான்சன் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. ஆதாரத்துடன் இதை நிரூபிப்போம் என்று ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கூறியுள்ளது.

பெரிய சரிவு
இந்த புகார்கள் மற்றும் சோதனைகள் காரணமாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பங்குகள் பெரிய அளவில் சரிந்துள்ளது. இந்த புகார்கள் காரணமாக மொத்தமாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு 4 கோடி டாலர் வரை பங்கு சந்தையில் இழப்பு ஏற்பட்டது. இது அந்த நிறுவனத்தை பெரிய அளவில் பாதித்துள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications