அந்தமான் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த பயணி.. அங்கேயே வாந்தி எடுத்து 'மட்டையானார்'

Subscribe to Oneindia Tamil

சென்னை: சில உள்ளூர் பஸ் நிலையங்களை போன்ற காட்சியை இன்று சென்னை விமான நிலையத்திற்கு சென்ற பயணிகள் பார்க்க நேர்ந்து அதிர்ச்சியில் முகம் சுளித்தனர்.

Recommended Video

    அந்தமான் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த பயணி.. அங்கேயே வாந்தி எடுத்து 'மட்டையானார்'

    விமான நிலையத்திற்கு உள்ளேயே ஒரு பயணி உருண்டு புரண்டு உளறிக் கொண்டிருந்தார். முதலில் சக பயணிகளுக்கு என்ன ஆச்சு என புரியவில்லை. உடம்பு சரியில்லையோ என நினைத்தனர். இதுகுறித்து அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்களுக்கு கூறினர்.

    Drunkard laying down in Chennai airport

    அவர்கள் வந்து விசாரித்தபோது, அந்த நபர் அந்தமான் செல்வதற்காக டிக்கெட் புக் செய்துவிட்டு வந்துள்ளது தெரியவந்தது. ஆனால், புத்தாண்டும் அதுவுமாக, அதை கொண்டாட, டாஸ்மாக்கில் மது வாங்கி மூக்கு முட்ட குடித்துள்ளார். போதை தலைக்கேறி, விமான நிலையத்தில் மட்டையாகியுள்ளார்.

    புத்தாண்டையொட்டி, தமிழகம் முழுக்க டாஸ்மாக்கில் ரூ.159 கோடி அளவுக்கு மதுபானம் விற்பனை நடந்துள்ளது. இந்த 159 கோடியில், இதோ விமான நிலையத்தின் ஒரு கோடிமுனையில் உருண்டு கிடக்கிறாரே, இந்த குடிமகனின் பங்கும் உண்டு.

    புத்தாண்டும் அதுவுமாக, குடியை விட வேண்டும், சிகரெட் பழக்கத்தை விட வேண்டும் என்று ஆக்கப்பூர்வமாக திருந்தி வாழ ஆரம்பிப்போரும் உண்டு. ஆனால், கொஞ்சமும் லஜ்ஜை இல்லாமல், புத்தாண்டும் அதுவுமாக குடித்து வீணாக போவோரும் உண்டு. அதில், இந்த 'மட்டையாளர்' இரண்டாவது வகை.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+