துரை வைகோ விஜய்யை சந்தித்த அடுத்த நிமிடம்.. ஸ்டாலின் கொடுத்த ‘கிரீன் சிக்னல்.. அலறும் மதிமுக?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் களத்தில் தற்போதைய சூழ்நிலை மிக முக்கியமான ஒரு கட்டத்தை எட்டியுள்ளது. கூட்டணியில் நீடித்துவரும் மறைமுகமான மோதல்கள் தற்போது வெளிப்படையான விவாதங்களாக மாறத் தொடங்கியுள்ளன. இதனால் பிரதான கட்சிகளுக்கு இடையே ஏற்படப்போகும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்தவகையில் மதிமுக - திமுக இடையேயான கூட்டணி உறவு எப்படி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, மதிமுகவின் அரசியல் நிலைப்பாடு குறித்து பல்வேறு விவாதங்கள் எழத் தொடங்கியுள்ளன.

Durai Vaiko

திருச்சியில் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வரவேற்ற மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, செய்தியாளர்களிடம் பேசும்போது தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

துரை வைகோ அதிருப்தி

தாங்கள் ஒரு தனி இயக்கம் என்றும், கடந்த தேர்தலில் துரதிர்ஷ்டவசமாக திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாலேயே, தவெகவிற்கு தங்களால் ஆதரவு அளிக்க முடியாமல் போனதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஜூன் 27ம் தேதி நடைபெறவிருக்கும் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகிகளின் மனநிலை மற்றும் தொண்டர்களின் விருப்பங்களைக் கேட்டறிந்த பிறகே, திமுக கூட்டணியில் தொடர்வதா இல்லையா என்பது குறித்த இறுதி முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

வைகோவின் குமுறல்கள்

துரை வைகோவின் இந்தத் தொடர் அதிருப்திப் பேச்சு அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மறுநாளே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது மகனின் பேச்சை நியாயப்படுத்தும் வகையில் திமுக மீதான தனது சொந்தக் குமுறல்களை வெளிப்படையாகக் கொட்டினார்.

திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு அதிக இடங்களை வழங்கிவிட்டு, மதிமுகவிற்கு மட்டும் குறைவான இடங்களை ஒதுக்கியதும், கடைசி நேரத்தில் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று நிர்பந்தித்ததும் தொண்டர்களிடையே மிகப்பெரிய ஆதங்கத்தை ஏற்படுத்தியதாக வைகோ தெரிவித்தார்.

அதுமட்டுமல்ல, தவெக அமைச்சரவையில் இடம்பிடித்த காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகளுடன் மதிமுகவை ஒப்பிடக் கூடாது என்று சீறிய வைகோ, தனிச்சின்னத்தில் போட்டியிட முடியாமல் போனதே தங்களின் முதன்மை வருத்தம் என்றார்.

மதிமுக பொதுக்குழு கூட்டம்

வைகோவும், துரை வைகோவும் இப்படி நூலளவு வித்தியாசத்தில் ஒரே மாதிரியான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதால், வரவிருக்கும் பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு மதிமுகவின் அரசியல் பயணத்தில் ஒரு மிகப்பெரிய அதிரடி மாற்றம் மற்றும் புதிய கூட்டணி திருப்பம் அரங்கேறலாம் என்று அரசியல் விமர்சகர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.

மதிமுகவின் இந்த அடுத்தடுத்த அதிரடி நகர்வுகளுக்குப் பின்னால், கடந்த லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலுக்கு முன்பிருந்தே அக்கட்சிக்குள் புகைந்து கொண்டிருந்த உட்கட்சிப் பூசல்களும், கடுமையான எதிர்ப்புகளுமே முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகின்றன.

குறிப்பாக மதிமுக முக்கிய நிர்வாகிகளான பொடா அழகு சுந்தரம், சண்முகசுந்தரம், புலவர் செவந்தியப்பன், டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் மற்றும் முன்னாள் அவைத்தலைவர் எஸ்.துரைசாமி உட்பட 12 முக்கிய நிர்வாகிகள் ம.தி.மு.க.,விலிருந்து முற்றிலும் விலகி, தற்போது அதிருப்தியாளர்களாக வெளியே முகாமிட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி, கட்சியின் துணை பொதுச்செயலராக இருந்த மல்லை சத்யாவும் ம.தி.மு.க.,விலிருந்து விலகி, தற்போது 'திராவிட வெற்றிக்கழகம்' என்ற தனிக்கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார்..

திமுக எடுக்க போகும் முடிவு

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே இந்த 12 அதிருப்தி நிர்வாகிகளும் திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைய விருப்பம் தெரிவித்துக் கடிதம் வழங்கியிருந்தனர். ஆனால், அந்த நேரத்தில் அவர்களை உடனடியாகத் தங்களது கட்சியில் சேர்த்துக் கொண்டால் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையான வருத்தமடைவார் என்று நினைத்த திமுக தலைமை, அவர்களைக் கட்சியில் சேர்க்காமல் நீண்ட நாட்களாகக் காத்திருப்போர் பட்டியலிலேயே வைத்திருந்தது.

மதிமுகவுடனான உறவு பாதிக்கப்படக் கூடாது என்பதில் திமுக காட்டிய இந்த நிதானம், தற்போது மதிமுக எடுக்கப்போகும் அடுத்தகட்ட முடிவைப் பொறுத்து முற்றிலும் மாறத் தொடங்கியுள்ளது.

ஸ்டாலின் பச்சைக்கொடி

வரும் 27ம் தேதி நடைபெறவிருக்கும் ம.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், இனிவரும் தேர்தல்களில் தனிச் சின்னத்தில் மட்டுமே போட்டியிடுவது என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை நிறைவேற்றப் போவதாக துரை வைகோ ஏற்கனவே பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

இந்த தீர்மானத்தைத் தொடர்ந்து, திமுக கூட்டணியிலிருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறும் முடிவை எடுக்கும் பட்சத்தில், திமுகவும் தங்களது அடுத்தகட்ட அரசியல் வியூகத்தை வகுக்கத் தயாராகிவிட்டதாக தெரிகிறது..

அதன்படி, மதிமுக கூட்டணியை விட்டு வெளியேறினால், நீண்ட நாட்களாகக் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள மதிமுக அதிருப்தியாளர்கள் 12 பேரையும் உடனடியாக திமுகவில் அதிகாரப்பூர்வமாக சேர்த்துக் கொள்ள திமுக தலைவர் .ஸ்டாலின் தரப்பில் தற்போது பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. எனினும், ஜூன் 27 மதிமுக பொதுக்குழுவிற்குப் பிறகு தமிழக அரசியல் களம் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது... பொறுத்திருந்து பார்ப்போம்...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+