துர்கா ஸ்டாலின் எழுதிய ‘அவரும் நானும்’ பாகம் 2 நாளை ரிலீஸ்! வெளியிட சென்னை வரும் சுப்ரியா சுலே!
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் எழுதிய 'அவரும் நானும்' புத்தகத்தின் இரண்டாவது பாகம் வெளியீட்டு விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நாளை நடைபெற உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், தனது கணவர் குறித்தும் தங்களுடைய மணவாழ்க்கை குறித்தும் குமுதம் சினேகிதி இதழில் ஐந்து ஆண்டுகளாக தளபதியும் நானும் என்ற தலைப்பில் தொடர் எழுதி வந்தார்.

வாசகர்களின் மிகுந்த வரவேற்பு பெற்ற அந்த தொடரில் ஸ்டாலின் மற்றும் துர்கா ஆகியோருடைய மண வாழ்க்கை, ஸ்டாலினின் அரசியல் பயணம், அவர் சந்தித்த அரசியல் நெருக்கடிகள், மிசா கொடுமைகள், அவர் சந்தித்த பிரச்சனைகள், நெருக்கடிகள், சாதனைகள், அதனை உடன் நின்று தான் பார்த்தது குறித்தும், குடும்ப நிகழ்வுகள் குறித்தும் சுவாரஸ்யமாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த புத்தகம் உயிர்மை பதிப்பகத்தின் மூலம் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி 'அவரும் நானும்' என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது. மீனா குமாரி வெளியிட துர்கா ஸ்டாலினின் பேத்திகளான தன்மயா சபரீசன், நிலானி உதயநிதி ஆகியோர் பெற்றிருந்தனர். இந்த நிகழ்வில் அப்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில், துர்கா ஸ்டாலின் எழுதிய 'அவரும் நானும்' புத்தகத்தின் இரண்டாவது பாகம் மீண்டும் உயிர்மை பதிப்பகத்தால் புத்தகமாக கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நாளை ஜூலை 19ஆம் தேதி மாலை 5 மணிக்கு இந்த நூல் வெளியிடப்படுகிறது.
இந்த நூலின் முதல் பிரதியை தேசியவாத காங்கிரஸ் - சரத் பவார் கட்சியைச் சேர்ந்த எம்.பி சுப்ரியா சூலே வெளியிட எழுத்தாளர் சிவசங்கரி பெற்றுக் கொள்கிறார். இந்த விழாவில் தமிழச்சி தங்கப்பாண்டியன், கவிஞர் மனுஷ்ய புத்திரன், பத்திரிகையாளர் லோகநாயகி, மேனாள் நீதிபதி பவானி சுப்பராயன், டாஃபே குழும நிர்வாக இயக்குநர் மல்லிகா சீனிவாசன், கோவை சந்திரா - ஜி.ஆர்.ஜி நிறுவனங்களின் தலைவர் நந்தினி ரங்கசாமி உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர். துர்கா ஸ்டாலின் ஏற்புரை வழங்குகிறார். ராஜேஷ் வைத்யாவின் வீணை இசை கச்சேரி நடைபெறுகிறது.
முதல் பாகம் வெளியாகி ஏழு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், அதில் இடம்பெறாத புதிய தகவல்கள் இரண்டாம் பாகத்தில் இடம்பெறுகின்றன. இதில், கலைஞர் மறைவு, மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பதவியேற்றது, தமிழக முதலமைச்சராக அரியணை ஏறியது என பல முக்கிய நிகழ்வுகள் தொடர்பாகவும், அந்த சூழல்களில் தனது கணவர் ஸ்டாலினின் எண்ண ஓட்டங்களையும் துர்கா ஸ்டாலின் எழுத்தில் வடித்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications