“எந்தக் காலத்திலும் பாமகவின் தலைமை அலுவலகம் தைலாபுரத்தில் இல்லை".. ராமதாஸுக்கு பாலு பதிலடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "சட்டமன்றத் தேர்தலில் பாமகவுக்கு மாம்பழச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள தகவலை தேர்தல் ஆணையம் அன்புமணியின் தியாகராயர் நகர் அலுவலகத்துக்கே அனுப்பி உள்ளது" என வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.

பாமக நிறு​வனர் ராம​தாஸ், அக்​கட்​சி​யின் தலை​வர் அன்​புமணி ராம​தாஸ் இடையே​யான மோதல் தொடர்ந்து வரும் நிலை​யில் இருவரும், மாறி மாறி நிர்வாகிகளை பதவி நீக்கம் செய்து வந்தனர். இருவரும் தனித்தனியாக பாமக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

EC Communicates Mango Symbol Allocation to PMK s T Nagar Office Says Advocate Balu

இந்நிலையில், ராம​தாஸின் பிறந்த நாளான ஜூலை 25 ஆம் தேதி தமிழக மக்கள் உரிமை மீட்​புப் பயணத்​தைத் தொடங்​கினார் அன்புமணி ராமதாஸ். 100 நாட்கள் இந்த சுற்றுப்பயணம் நடைபெறும் என்றும் அன்​புமணி ராமதாஸ் அறிவித்திருந்தார். முன்னதாக இந்த நடைபயணத்​தால் வடதமிழகத்​தில் சட்​டம் ஒழுங்கு சீர்​கெடும் என்​ப​தால் தடை விதிக்​கக்​கோரி டிஜிபி அலு​வல​கத்​தில் பாமக நிறுவனர் ராம​தாஸ் மனு அளித்​தார். எனினும் திட்​ட​மிட்​டபடி 25 ஆம் தேதி திருப்​போரூரில் நடைபயணத்தை தொடங்கி​னார் அன்புமணி.

இந்நிலையில் ராமதாஸூம், அன்புமணியும் தனித்தனியாக பொதுக்குழு கூட்டங்களை அறிவித்துள்ளனர். பாமக நிறு​வனர் மற்​றும் தலை​வர் ராம​தாஸ் உத்தர​வுபடி, திண்​டிவனம் - புதுச்​சேரி செல்​லும் வழி​யில் உள்ள பட்​டானூர் சங்கமித்ரா திருமண மண்​டபத்​தில் வரும் 17 ஆம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு பொதுக்​குழுக் கூட்​டம் நடை​பெற உள்​ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, ராம​தாஸ் நடத்​துக்​கும் கூட்​டத்​துக்கு போட்​டி​யாக ஆக. 9-ம் தேதி பொதுக்​குழுக் கூட்​டம் நடை​பெறும் என்று பாமக தலை​வர் அன்​புமணி அறி​வித்துள்​ளார். இது தொடர்​பாக அன்​புமணி மற்றும் பொதுச் செய​லா​ளர் வடிவேல் ராவணன் வெளி​யிட்ட அறிக்​கை​யில், "பாமக பொதுக்​குழுக் கூட்​டம் மாமல்லபுரத்​தில் உள்ள கான்ப்​ளுயன்ஸ் அரங்​கில் ஆக. 9-ம் தேதி நடை​பெறும். பொதுக்​குழு உறுப்​பினர்​கள் தவறாது பங்​கேற்க வேண்​டும்" என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் தனித்தனியாக பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டியிருப்பதால் அக்கட்சி வட்டாரத்தில் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ராமதாஸ், அன்புமணி மீது பரபரப்பு குற்றச்சாஅட்டுகளை முன்வைத்துள்ளார்.

அன்புமணி பொதுக்குழுவை கூட்டியிருப்பது சட்டவிரோதம் என ராமதாஸ் கூறியிருந்த நிலையில் வழக்கறிஞர் பாலு இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

அப்போது அவர் பேசுகையில், "அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் கட்சி விதிகளின்படியே கூட்டப்படுகிறது. மேலும், பாமக பொதுக்குழு வரும் 16ம் தேதி நடக்கும் என சமூக வலைத்தளத்தில் வெளியான அறிவிப்பில் யார் வெளியிட்டார்கள் என்பது இல்லை. பாமக விதியின்படி ஒவ்வொரு கூட்டத்துக்கும் ஒரு வாரத்துக்கு முன்பாக அறிவிப்பு வெளியிட்டால் போதுமானது." எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், "எந்தக் காலத்திலும் பாமகவின் தலைமை அலுவலகம் தைலாபுரத்தில் இல்லை. கட்சி தொடங்கியது முதலே சென்னையில்தான் உள்ளது. சட்டமன்றத் தேர்தலில் பாமகவுக்கு மாம்பழச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள தகவலை தேர்தல் ஆணையம் அன்புமணியின் தியாகராயர் நகர் அலுவலகத்துக்கே அனுப்பி உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+