Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை டூ டெல்டா இனி சல்லுன்னு பறக்கலாம்.. ECR சாலையில் பெரிய மாற்றம்.. 17 வருட ஏக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிழக்கு கடற்கரைச் சாலையை (ECR) நான்கு வழிச்சாலையாக விரிவாக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, புதுச்சேரி - பூண்டியங்குப்பம் இடையிலான 38 கி.மீ. தூரப் பணிகள் நிறைவடைந்துள்ளன. பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் ₹1,588 கோடி செலவில் இந்த பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

இப்பணிகள் நிறைவடைந்ததால், கடலூர், சிதம்பரம், சீர்காழி, நாகப்பட்டினம் போன்ற பகுதிகளுக்குப் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு பயண நேரம் இரண்டு மணி நேரம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மற்றும் நாகப்பட்டினம் (320 கி.மீ.) இடையேயான கார் பயண நேரம் ஏழு மணி நேரத்திலிருந்து ஆறு மணி நேரமாகவும், பேருந்து பயண நேரம் ஒன்பது மணி நேரத்திலிருந்து ஏழு மணி நேரமாகவும் குறையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

chennai ecr omr

சென்னை மற்றும் நாகப்பட்டினம் பயணம்

திருவான்மியூரில் இருந்து நாகப்பட்டினம் வரையிலான 300 கி.மீ. ஈ.சி.ஆர். சாலையில் தற்போது 220 கி.மீ. தூரம் நான்கு வழிச் சாலையாக விரிவுபடுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இது தமிழகத்தின் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களுக்கான சாலை இணைப்பை வெகுவாக மேம்படுத்துகிறது.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, அக்டோபர் 13 அன்று இந்தப் புதிய சாலைப் பிரிவுகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். மேலும், 300 கி.மீ. ஈ.சி.ஆர். விரிவாக்கத் திட்டத்தின் இறுதிப் பகுதியான மரக்காணம் - புதுச்சேரி இடையேயான 46 கி.மீ. தூர நான்கு வழிச்சாலைப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் அவர் உள்ளார் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நான்கு வழிச்சாலை

நிறைவு செய்யப்பட்ட 220 கி.மீ. நான்கு வழிச்சாலைகளில் திருவான்மியூர் - மாமல்லபுரம் (41 கி.மீ.) மற்றும் பூண்டியங்குப்பம் - சத்தநாதபுரம் (57 கி.மீ.) ஆகிய பகுதிகள் ஏற்கனவே மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.

சத்தநாதபுரம் - நாகப்பட்டினம் (56 கி.மீ.) மற்றும் மாமல்லபுரம் - மரக்காணம் (62 கி.மீ.) ஆகிய 119 கி.மீ. தூரப் பிரிவுகளில் தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 85 கி.மீ. தூரப் பணிகள் ஏற்கனவே முடிந்துவிட்டன. எஞ்சிய பகுதிகள் அடுத்த ஆண்டு மத்தியில் முடிக்கப்படும் என்றும், மரக்காணம் - புதுச்சேரி இடையேயான இறுதிப் பணிகளும் விரைவில் தொடங்கும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

டெல்டா மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஈ.சி.ஆர். நான்கு வழிச்சாலைப் பணி, முதன்முதலில் 2008 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் கவலைகள் மற்றும் நீண்டகால வழக்குகள் காரணமாக தாமதங்களைச் சந்தித்தது. சென்னை முதல் நாகப்பட்டினம் வரையிலான ஈ.சி.ஆர். விரிவாக்கம், நீண்டகாலமாக சரியான சாலை இணைப்பு இல்லாமல் சிரமப்பட்ட மக்களுக்குப் பெரும் பயன் அளிக்கும்.

புதுச்சேரி - நாகப்பட்டினம் பிரிவு மேம்பாட்டின் ஒரு பகுதியாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையையும் அகலப்படுத்தியுள்ளது. இது தாம்பரம் - திருச்சி வழித்தடங்களுக்கான இணைப்புகளை மேம்படுத்தியுள்ளது. இந்த பணிகள் டெல்டா பகுதிக்கு சாலை மற்றும் பேருந்துப் போக்குவரத்தை கணிசமாக மேம்படுத்தியுள்ளன.

சத்தநாதபுரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை (56 கி.மீ.) திட்டம் சீர்காழிக்கு அருகிலுள்ள சத்தநாதபுரத்தில் தொடங்கி நாகூர் மற்றும் நாகப்பட்டினம் புறவழிச்சாலைக்கு (மேற்குப் பகுதி) அருகில் முடிவடைகிறது. தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் வழியாகச் செல்லும் இத்திட்டம் ₹2,899 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 56 கி.மீ. தூரத்தில் 50 கி.மீ. பணிகள் இதுவரை முடிந்துள்ளன.

தரங்கம்பாடி - மயிலாடுதுறை

இறுதி கட்டத்தில், தரங்கம்பாடி - மயிலாடுதுறை ரயில்வே வழித்தடம் மற்றும் திருநள்ளாறு ரயில் நிலையம் அருகே உள்ள காரைக்கால் - பேரளம் பிரிவில் சாலை மேம்பாலங்கள் கட்டும் பணிகள் அடங்கும். ஒரு பெரிய மேம்பாலம் நிறைவடையும் நிலையில் உள்ளது என்றும், ரயில்வே தங்கள் பகுதியைப் பூர்த்தி செய்தவுடன் மீதமுள்ள பணிகள் முடிவடையும் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேபோல், மாமல்லபுரம் - மரக்காணம் இடையேயான 62 கி.மீ. தூரத்தில், 35 கி.மீ. பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் நீர்நிலைகள், நீதிமன்ற வழக்குகள் மற்றும் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான சவால்களால் தாமதமாகி வருவதாக வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+