எத்தனை வருட ஏக்கம்.. பிரம்மாண்ட 6 வழி! நிறைவு பெறுகிறது ECR சாலை விரிவாக்கம்.. எப்போது திறக்கப்படும்
சென்னை: கோவளம் முதல் அக்கரை வரையிலான கிழக்கு கடற்கரை சாலை (ECR) 8.6 கி.மீ. நீளத்திற்கு ஆறு வழிச்சாலையாக விரிவாக்கும் பணி ஜனவரி இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலம் கையகப்படுத்துதலில் ஏற்பட்ட தாமதங்களே இத்திட்டம் நீண்டு போனதற்கு காரணம் என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். தற்போது அத்தடைகள் நீக்கப்பட்டுவிட்டன.
நெடுஞ்சாலைத்துறையின் தகவல்படி, 1.2 கி.மீ. தூரத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளன. நில ஆவணங்களில் சில குறைபாடுகள் இருந்தன. அவை சரிசெய்யப்பட்டுவிட்டன. நில உரிமையாளர்களுக்கு விரைவில் இழப்பீடு வழங்கப்படும், என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.

ECR சாலையை அகலப்படுத்தும் திட்டம்
திருவான்மியூர் முதல் அக்கரை வரை சாலையை அகலப்படுத்தும் திட்டம் 2005 ஆம் ஆண்டிலேயே ₹10 கோடி ஒதுக்கீட்டுடன் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், ஏராளமான சிறு சொத்துக்கள் தொடர்பான நீதிமன்ற வழக்குகள் மற்றும் நில உரிமை மாற்றங்கள் போன்ற காரணங்களால் இத்திட்டம் நடைமுறைக்கு வரவில்லை.
2018-19 ஆம் ஆண்டில் இத்திட்டம் வேகம் பெற்றது. அப்போது முடிந்த இடங்களில் சாலைகள் அகலப்படுத்தப்பட்டன. ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் பணிகள் ஸ்தம்பித்தன. கடந்த ஆண்டுதான் மீண்டும் வேகமெடுத்தது.
ECR குடியிருப்பாளர்கள் கூறுகையில், சாலை விரிவாக்கத்தால் வாகனங்கள் வெளிப்புறப் பாதைகளில் நிறுத்தப்படுகின்றன. "நாங்கள் இன்னும் நடுவில் உள்ள இரண்டு பாதைகளில்தான் ஓட்டுகிறோம். நடுப்பகுதி கட்டுவதற்கு முன்பு வாகனங்களை முந்த முடிந்தது. ஆனால் இப்போது அது சாத்தியமில்லை, அதே மெதுவான வேகத்தில் தான் பயணிக்கிறோம். சிறந்த போக்குவரத்து ஒழுங்குமுறைதான் தேவை.
கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் நேராக இல்லாததால் சாலைகள் வளைந்துள்ளன. அவற்றோடு செல்லும் மழைநீர் வடிகால்களும் வளைந்துள்ளன என்று குறிப்பிட்டார். "இஞ்சம்பாக்கத்தில் மழைநீர் வடிகால் அருகே உள்ள மண் குவியல்களில் புற்கள் வளர்ந்துள்ளன. மேலும், புதிதாக கட்டப்பட்ட நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், பாதசாரிகள் சாலையிலேயே நடக்க வேண்டியுள்ளது, என்று அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.
இது போக பக்கிங்ஹாம் கால்வாய்க்கு குறுக்கே அமைக்கப்படவுள்ள கிழக்கு கடற்கரை சாலை (ECR) - ஓல்ட் மகாபலிபுரம் சாலை (OMR) இரும்பு இணைப்புப் பாலத்திற்கான திட்ட வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த புதிய சாலை தோராயமாக 1.465 கிலோமீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். இது தோராயமாக நான்கு வழிப்பாதையாகவும், இருவழிப் போக்குவரத்து வசதி கொண்டதாகவும் அமையவுள்ளது.
தற்போது தோரைப்பாக்கம் பகுதியில் இந்த திட்டம் செயல்படுத்துவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டம் அப்பகுதி போக்குவரத்து நெரிசலைக் கணிசமாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே பாலம்
பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே கட்டப்படவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ECR-OMR இணைப்புச் சாலைப் பாலத்திற்கான CRZ அனுமதிக்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை விண்ணப்பித்துள்ளது.
இதன் மூலம் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கிழக்கு கடற்கரை சாலையையும் (ECR) பழைய மகாபலிபுரம் சாலையையும் (OMR) இணைக்கும் திட்டம் விரைவில் நிறைவேறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பக்கிங்ஹாம் கால்வாயின் மீது இதற்காக இரும்பு பாலம் அமைக்கப்பட உள்ளது. தொரைப்பாக்கம் (ஓஎம்ஆர்) முதல் நீலாங்கரை (ஈசிஆர்) ஆகியவற்றை இணைக்கும் இரும்புப் பாலத்தை ₹37 கோடிக்கு மாநில நெடுஞ்சாலைத் துறை அமைக்க உள்ளது. இதற்கான டெண்டர் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சோழிங்கநல்லூர் மற்றும் திருவான்மியூரில் நெரிசலைக் குறைக்கும் வகையில் ஆறு வழிச்சாலை, 36 மீட்டர் நீளமுள்ள பாலத்தில் bund மற்றும் அப்ரோச் சாலைகள் அமைக்கப்படும்.
-
கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்திற்கு.. 'கலைஞர்' பெயர்! தமிழ்நாடு அரசு ஒப்புதல் -
சென்னையின் இருதயத்தில் நடக்கும்.. பைபாஸ் சர்ஜரி.. 100 கி.மீ சாலைகள் விரிவாக்கம்.. அடியோடு மாறுது! -
சென்னையிலுள்ள தங்கும் ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கின்றன தெரியுமா? -
“பாட்டிலுக்கு 10 ரூபாய்”: பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால்- ஐகோர்ட் வார்னிங் -
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
பரங்கிமலை இன்று முதல் சென்னையின் ‘ஹாட்ஸ்பாட்’.. கடற்கரை - பரங்கிமலை பறக்கும் ரயில் அட்டவணை வெளியீடு! -
"ஸ்டாக் இல்லை" சென்னை கடைகளில் மளமளவென காலியாகும் இண்டக்ஷன் ஸ்டவ்-கள்! நேரடி கள ரிப்போர்ட்! -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
சென்னையில் மூடப்பட்ட பங்குகள்.. பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு! இப்படியே போனா கஷ்டம் -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன்












Click it and Unblock the Notifications