சென்னையில் பிரபல தொழிலதிபர் மகள் வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனை ஓவர்.. சிக்கிய முக்கிய ஆவணங்கள்?
சென்னை: சென்னையில் பிரபல தொழிலதிபரின் மகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்துள்ளது. கடந்த 2 நாட்களாக 7 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையில் ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அபிராமபுரத்தில் அமைந்துள்ள பிரபல தொழிலதிபரின் மகள் ஒருவரின் வீட்டில் அமலாக்கத் துறையினர் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி சோதனையைத் தொடங்கினர். ஜனவரி 31 ஆம் தேதி காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

வருமான வரித்துறை அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதாக கூறப்பட்டது. சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக இந்த சோதனை நடந்து வருவதாகவும் முதல்கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், தொழிலதிபரின் மகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்துள்ளது. கடந்த 2 நாட்களாக 7 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையில் ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications