முக்கிய புள்ளி டார்கெட்.. சென்னையில் களமிறங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள்.. காலை முதலே அதிரடி சோதனை
சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை அசோக் நகரில் இயங்கி வரும் மருந்து நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளருக்கு சொந்தமானை இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சி.ஆர்பிஎப் வீரர்கள் உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். அதிமுக ஆட்சிக்காலத்தில் மாசு கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்தவர் வீட்டிலும் இந்த சோதனை நடந்து வருகிறது.
சென்னையில் 7 க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதலே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சிஆர்பிஎப் உதவியுடன் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. அசோக் நகரில் உள்ள என்சி எஸ் டெக்னாலஜி என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.

காலையிலேயே அமலாக்கத்துறை ரெய்டு
தனியார் நிறுவனத்தின் உரிமையாளரின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள தொழில் அதிபர் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தனியார் நிறுவனம் மருத்துவத்துறை சார்ந்த உபகரணங்கள் விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிறுவனம் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதா என்ற கோணத்தில் சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது. இதேபோன்று விருகம்பாக்கம், சாலிகிராமம், தி. நகர், அசோக் நகர், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் ஆகிய இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல நிறுவனத்தின் இயக்குநர் ஏகே நாதன் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
என்சிஸ் டெக்னாலஜி
அசோக் நகர் 7வது நிழற் சாலையில் உள்ள என்சிஸ் டெக்னாலஜி என்ற தனியார் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் என்சிஸ் டெக்னாலஜி நிறுவனத்தின் இயக்குனர் அலங்காரநாதனின் சைதாப்பேட்டையில் உள்ள வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறார்கள். இதேபோன்று சேகர் ரெட்டி உறவினர்கள் வீட்டிலும் ரெய்டு நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோயம்பேட்டில் உள்ள குணசேகரன் என்பவரது வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. மருத்துவ உபகரணங்கள் சப்ளை செய்யப்பட்ட நிறுவனங்களில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. சென்னையில் காலை முதலே நடைபெற்று வரும் இந்த அமலாக்கத்துறை சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோதனை தொடர்பாக விரிவான தகவல் அமலாக்கத்துறை தரப்பில் இருந்து இன்னும் வெளியிடப்படவில்லை.
முன்னாள் மாசு கட்டுப்பாட்டு அதிகாரி
விருகம்பாக்கம் காவேரி தெருப் பகுதியில் பாண்டியன் என்பவர் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. பாண்டியன் என்பவர் மாசு கட்டுப்பாட்டு வாரியத் துறையில் கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவர் என்பது தெரியவந்துள்ளது. இவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு ஒன்று உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின் போது மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் துறை கண்காணிப்பாளராக இருந்த போது அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி இவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தம்மான இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்தது. இதில் 1.37 கோடி ரொக்கம், 3 கிலோ தங்க கட்டிகள், 3 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டிரான்ஸ்பரான சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியானது எப்படி? இரவில் நடந்தது என்ன? -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications