"கைமாறிய" பவர்.. எடப்பாடியா இப்படி சொல்றாரு.. என்ன திடீர்னு? அதிமுக மா.செ.கூட்டம் கூட்டம் இதுக்காகவா
சென்னை: எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று, மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட உள்ள நிலையில், மிகுந்த பரபரப்பும், எதிர்பார்ப்பும், கூடிவருகிறது.
ஒருவருட காலமாகவே, அதிமுகவுக்குள் ஒற்றை தலைமை பூசல் நிலவிவந்த நிலையில், அது கடந்த வருடம் பொதுக்குழு கூட்டத்தின் வெளியே, உடைத்து கிளம்பியது..

கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி இந்த பொதுக்குழு கூட்டம் நடந்தது.. அதிமுக சட்டவிதிகளில் மாற்றம் செய்து அதிமுக பொதுக்குழு செயற்குழு தீர்மானம் அன்றைய தினம் நிறைவேற்றியது.
சட்டவிதிகள்: ஆனால், சட்ட விதிகளில் மாற்றம் செய்ததை அங்கீகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர். ஹைகோர்ட், சுப்ரீம்கோர்ட்டில், அதிமுக விவகாரத்தில் வழக்குகள் நிலுவையில் இருந்ததன் காரணமாக, அந்த சட்ட விதிகளை தேர்தல் ஆணையம் இணையத்தில் பதிவேற்றாமலேயே இருந்தது.. எனவே, கடந்த ஏப்ரல் மாதத்தில் மாற்றம் செய்யப்பட்ட அதிமுக சட்ட விதிகளை நாங்கள் அங்கீகரிக்கிறோம் என்று தேர்தல் ஆணையம் அதிமுகவிற்கு கடிதம் எழுதி இருந்தது.
இப்படிப்பட்ட சூழலில்தான் நேற்று, இந்த சட்ட விதிகளை முழுமையாக அங்கீகரித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இணையத்திலும் பதிவேற்றிவிட்டது.. இன்று அல்லது நாளை, அதிமுகவின் முழுமையான சட்ட விதிகள் வெப்சைட்டிலும் பதிவேற்றம் செய்யப்படும் என்று அதிமுக வழக்கறிஞர்களுக்கு தேர்தல் ஆணையமும் கடிதம் எழுதியுள்ளது..
அங்கீகாரம்: இப்படி தேர்தல் ஆணைய வெப்சைட்டில், அதிமுகவின் சட்ட விதிகளை பதிவேற்றம் செய்ததன் மூலம் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது... அத்துடன் இரட்டை இலை சின்னமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்ற கடிதமானது, அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு அதிமுக பொதுச்செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்தான், இன்றைய தினம் அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.. இந்த கூட்டம் எதற்காக நடத்தப்படுகிறது என்று உறுதியாக தெரியவில்லை.. அதிமுக சட்ட விதிகளை தேர்தல் ஆணையம் வெப்சைட்டில் பதிவேற்றி உடனேயே, மறுநாளே மா.செ.க்கள் கூட்டம் கூடுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு எகிறி வருகிறது..
கட்சி & சின்னம்: கட்சி மற்றும் சின்னம் இரண்டுமே உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதால், அநேகமாக எம்பி தேர்தலுக்கான வியூகங்கள், பூத் கமிட்டிகள் போன்றவை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கலாம் என்கிறார்கள்.. அல்லது மதுரையில் மாநாடு நடத்த உள்ளதால், அது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படலாம் என்றும் சொல்கிறார்கள்..
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications