"இடிக்குதே".. பன்னீர்செல்வத்தை "இருட்டில் பிடித்த கை".. குழம்பும் எடப்பாடி பழனிசாமி.. கவனித்த திமுக
சென்னை: ஓபிஎஸ் + தினகரன் இருவரும் இணைந்துள்ள நிலையில், தென்மண்டலங்களின் வாக்குகளை குறி வைத்து காய் நகர்த்தி வருகிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டு வந்த விஷயம்தான், நேற்றைய தினம் நடந்துள்ளது.. இத்தனை வருடமும், டிடிவி தினகரனின் மறைமுகமான ஆதரவை ஓபிஎஸ் பெற்று வந்த நிலையில், பழைய நண்பரை மீண்டும் சந்தித்து விட்டார் தினகரன்.
இந்த சந்திப்பின் பின்னணி காரணம் என்று பெரிதாக எதுவும் இருக்க வாய்ப்பில்லை.. ஒத்த கருத்துக்களை இருவருமே கொண்டிருக்கும் நிலையில், தென்மண்டல செல்வாக்குகள் வலுப்பெற்றுள்ளன.

தினகரன் + ஓபிஎஸ்: ஓபிஎஸ்ஸை கட்சிக்குள் மீண்டும் அழைத்து வந்தாலும், தினகரன், சசிகலாவுடனான தொடர்பையே நாடி செல்வார் என்பதைதான் எடப்பாடி பழனிசாமியும் ஏற்கனவே நன்கு அறிந்து வைத்திருந்தார்.. இன்னும்சொல்லப்போனால், ஓபிஎஸ்ஸை அன்று அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கிவைக்க காரணமே, பாஜக + மன்னார்குடி குடும்பம் என்றார்கள் அரசியல் விமர்சகர்கள்.. ஓபிஎஸ்ஸை விலக்கி வைப்பதன்மூலம், பாஜகவுக்கு செக் வைக்க முடியும் என்றும் நம்பப்பட்டதாக தெரிகிறது. எனினும், பாஜகவை அதிமுகவால் எந்த சூழலிலும் தவிர்க்கவே முடியாது என்பதுதான் கூட்டணி மூலம் இன்று நிஜமாகி உள்ளது.
அதேசமயம், ஓபிஎஸ்ஸின் அரசியல் இப்போது எதை நோக்கி நகர்கிறது என்ற அடுத்தக்கட்ட கேள்வியும் எழுகிறது.. தினகரனை சந்திதப்பதன் மூலம் அமமுகவில் இணைய திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வட்டமடிக்கிறது.. மற்றொருபக்கம், தனி அணியாகவே செயல்பட்டு, பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தன் இன்னொரு மகனான ஜெயபிரதீப் பாஜகவில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும், அதற்கான தூது நடவடிக்கைகளும் ஆரம்பமாகிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

பழைய பன்னீர்: பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்வுக்கு எதிராக ஹைகோர்ட்டில் ஓபிஎஸ் அப்பீலுக்கு சென்றுள்ள நிலையில், அதன் முடிவுகள் எப்படி இருக்க போகிறதென்று தெரியவில்லை.. அதுவரை அமமுகவில் ஓபிஎஸ் இணைவதும் சாத்தியமில்லை என்கிறார்கள்.. அதேசமயம், தனக்கென்று ஒரு கட்சி இருந்தால் மட்டுமே தேர்தலை சந்திக்க முடியும் என்ற சூழ்நிலையும் ஓபிஎஸ்ஸூக்கு உருவாகியுள்ளது. ஆனால், தனிக்கட்சி ஆரம்பிக்கவும் தயக்கம் காட்டுவதாக தெரிகிறது.
அதனாலேயே, அமமுகவில் இணைந்து பயணிக்க முடிவு செய்துள்ளதாகவும், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பன்னீரே விரைவில் வெளியிடுவார் என்றும் சொல்கிறார்கள். சசிகலாவையும் சந்திக்க இருப்பதாக ஓபிஎஸ் சொல்கிறார்.. அப்படியே சசிகலாவை சந்தித்தாலும், சசிகலா மூலம் பெரிய அரசியல் லாபம் ஓபிஎஸ்ஸூக்கு கிடைக்க வாய்ப்பிருக்காது என்றே தெரிகிறது.. அந்தவகையில், "பவர்புல்" தினகரனின் அரசியல் ஓபிஎஸ்ஸுக்கு இன்றைய தேவையாக இருக்கிறது.
முக்குலத்தோர் வாக்குகள்: காரணம், தனக்கான ஓட்டு வங்கி எவ்வளவு என்பதை ஒவ்வொரு தேர்தலின்போதும் தினகரன் நிரூபித்து வருகிறார்.. ஆனால், ஓபிஎஸ்ஸுக்கு எவ்வளவு வாக்கு வங்கி உள்ளதென்று இதுவரை தெரியவில்லை.. இதுவரை தனித்தும் அவர் களமாடியதில்லை.. ஆனால், முக்குலத்தோர் வாக்குகள் ஓரளவு இருப்பதாக நம்பப்பட்டு வருகிறது.. எப்படி பார்த்தாலும், சமூக வாக்குகளை தினகரன் + ஓபிஎஸ் + சசிகலா மூவரும் தக்கவைக்க நிறைய வாய்ப்புள்ளது. இவர்கள் பெறப்போகும் வாக்குகள் திமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் என்பதையும் மறுக்க முடியாது.
இப்படிப்பட்ட சூழலில்தான், மதுரையில் எடப்பாடி பழனிசாமி நடத்தும் மாநாடு பிரதான கவனம் பெறுகிறது.. கடந்த ஒருவருட காலமாகவே, ஆர்பி உதயகுமார் முதல் செல்லூர் ராஜூ வரை முக்கியத்துவத்தை தந்து எடப்பாடி பழனிசாமி உயர்த்திப்பிடித்த போதிலும், போதிய பலத்தை அவரால் தென்மண்டலத்தில் நிரூபிக்க முடியவில்லை.. சென்ட்டிமென்ட்டாக மதுரையில் மாநாட்டினை எடப்பாடி நடத்துகிறார் என்றாலும், இவையெல்லாம் வாக்குகளாக திரும்ப கிடைக்குமா என்பது சந்தேகம்தானாம்.

சொந்த செல்வாக்கு: சொந்த செல்வாக்கை தெற்கில் எடப்பாடி நிரூபிக்கும்வரை, ஓபிஎஸ், தினகரனை பாஜகவால் தவிர்க்கவும் முடியாத நிலைமை உள்ளது.. இப்போது ஓபிஎஸ் + தினகரன் சந்திப்பின் தாக்கம், முக்குலத்தோர் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று தந்து வருகிறது.. அதுமட்டுமல்ல, தென்மண்டல அதிமுகவின் முக்கிய புள்ளிகளை, தங்கள் பக்கம் இழுக்கவும் இந்த இரட்டையர்கள் புது பிளானில் இறங்கி உள்ளார்களாம். இவர்களை தனிநபராக உதயகுமார் மட்டுமே சமாளிக்க முடியுமா? என்பதும் கேள்வியாக உள்ளது..
"ஓபிஎஸ்சின் கையை பிடித்து இருட்டில்கூட போக முடியும்" என்ற தினகரனின் வார்த்தைகள் பல அர்த்தங்கள் உள்ளதையும் நாம் இங்கே உற்றுகவனிக்க வேண்டி உள்ளது..!!
இன்னொன்றையும் கவனிக்க வேண்டி உள்ளது.. நேற்றைய தினம் ஓபிஎஸ் + தினகரன் சந்திப்பு நடந்துள்ளது.. மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனுடன், தினகரனுடனான இந்த சந்திப்பை ஓபிஎஸ் நடத்தி உள்ளார்.. ஆனால், வைத்தியலிங்கம், ஜேசிடி.பிரபாகரன், மனோஜ் பாண்டியன் போன்ற முக்கிய நிர்வாகிகள் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை... இது மிகுந்த கவனம் பெற்று வருகிறது.. ஒருவேளை தினகரனுடனான சந்திப்பில் இவர்களுக்கு உடன்பாடு இல்லையா? அதிருப்தியா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று தெரியவில்லை.. ஆனால், ஜெயக்குமார், இதையும் விட்டுவைக்காமல் வழக்கம்போல் விமர்சிக்க தொடங்கி உள்ளார்.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications