வரதட்சணை வழக்கில் இனி 10 ஆண்டு சிறை... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு
சென்னை: வரதட்சணை வழக்கில் 7 ஆண்டுகளாக உள்ள சிறைதண்டனை இனி 10 ஆண்டுகளாக உயர்த்த பரிந்துரைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட அவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனை பாதுகாக்கும் அரசு அதிமுக அரசு எனக் கூறினார்.
இதேபோல் தவறான எண்ணத்துடன் பெண்களை பின் தொடர்ந்து சென்றால் 5 ஆண்டுகளாக உள்ள சிறைத்தண்டனை இனி 7 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் அதிரடி
தமிழகத்தில் வரதட்சணை கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கு ஒரு முடிவு கட்டியிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்யும் மாப்பிள்ளைகளையும், மாமியார்களையும் 10 ஆண்டுகள் சிறைக்குள் தள்ளும் வகையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டிருக்கிறார். சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் அறிவிப்பு வெளிட்ட அவர், வரதட்சணை குற்றத்துக்கான தண்டனை காலம் 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்த பரிந்துரைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

குண்டர் சட்டம்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக செயல்படுபவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வருவதாகவும் தவறான எண்ணத்துடன் பெண்களை பின் தொடர்ந்து சீண்டுபவர்களுக்கு 5 ஆண்டுகளாக உள்ள சிறைத்தண்டனை 7 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பு பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.

ஆயுள் தண்டனை
இதனிடையே 18-வயதிற்குள் கீழ் உள்ள பெண்களை கொத்தடிமைகளாக வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க பரிந்துரை செய்யப்படுவதாக 110- விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதிமுக அரசை பொறுத்தவரை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அரணாக விளங்கக்கூடிய அரசு என்றும் பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் சமரசத்திற்கு இடமின்றி செயல்படுவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
1992-ம் ஆண்டு
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் தான் கொண்டுவரபட்டதாகவும் 1992-ம் ஆண்டு மகளிர் காவல் நிலையங்களை அமைத்து பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒடுக்க நடவடிக்கை எடுத்தவர் ஜெயலலிதா எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது உரையின் போது பெருமிதம் தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications