ராஜேந்திரபாலாஜி ஏன் இப்படி நடந்துகொள்கிறார்... ஓ.பி.எஸ்.ஸிடம் வருத்தப்பட்ட இ.பி.எஸ்.
சென்னை: விருதுநகரில் செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி மிகுந்த கோபத்தில் உள்ளாராம்.
அதிமுகவில் விருதுநகர் மாவட்டச் செயலாளராகவும், பால்வளத்துறை அமைச்சராகவும் உள்ள ராஜேந்திரபாலாஜி அண்மைக்காலமாக சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதும், செயல்படுவதுமாகவும் உள்ளார். இவரின் கருத்துக்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பல நேரங்களில் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடுகின்றன. இதனால் இது பற்றி பல முறை ராஜேந்திரபாலாஜியிடம் எடுத்துக்கூறியும் அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாக தெரியவில்லை. எத்தனை முறை அறிவுறுத்தப்பட்டாலும் தனது போக்கில் இருந்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மாறவில்லை.

தன்னைப் பற்றி வார இதழ் ஒன்று வெளியிட்ட செய்தி காரணமாக அந்த இதழின் விருதுநகர் மாவட்ட செய்தியாளர் மீது நேற்று முன் தினம் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் வெகுண்டெழுந்த பத்திரிகையாளர்கள் சென்னையில் போராட்டம் நடத்தியதுடன், அமைச்சருக்கு கண்டனமும் தெரிவித்துள்ளனர். மேலும், மூத்த பத்திரிகையாளர்கள் சிலர் ராஜேந்திரபாலாஜியை பற்றி முதல்வர் தரப்பில் புகாரும் கூறியுள்ளனர். ஏற்கனவே ராஜேந்திரபாலாஜியும் பேச்சும், செயல்பாடும் முதல்வருக்கு பிடிக்காமல் இருந்த நிலையில் பத்திரிகையாளர் மீதான தாக்குதல் மேலும் அவருக்கு கோபத்தை அதிகப்படுத்தியுள்ளது.
அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, உதயகுமார், போன்றோரும் ராஜேந்திரபாலாஜி இந்த விவகாரத்தில் அமைதி காத்திருக்க வேண்டும் என்றும், அவசரப்பட்டிருக்க கூடாது எனவும் அதிருப்தி தெரிவித்தார்களாம். இதனிடையே துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஸிடம் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஏன் இப்படி நடந்துகொள்கிறார் என முதல்வர் வருத்தப்பட்டிருக்கிறார். அவரும் என்ன சொல்வது எனத் தெரியாமல் விசாரிப்போம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications