ராஜேந்திரபாலாஜி ஏன் இப்படி நடந்துகொள்கிறார்... ஓ.பி.எஸ்.ஸிடம் வருத்தப்பட்ட இ.பி.எஸ்.
சென்னை: விருதுநகரில் செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி மிகுந்த கோபத்தில் உள்ளாராம்.
அதிமுகவில் விருதுநகர் மாவட்டச் செயலாளராகவும், பால்வளத்துறை அமைச்சராகவும் உள்ள ராஜேந்திரபாலாஜி அண்மைக்காலமாக சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதும், செயல்படுவதுமாகவும் உள்ளார். இவரின் கருத்துக்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பல நேரங்களில் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடுகின்றன. இதனால் இது பற்றி பல முறை ராஜேந்திரபாலாஜியிடம் எடுத்துக்கூறியும் அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாக தெரியவில்லை. எத்தனை முறை அறிவுறுத்தப்பட்டாலும் தனது போக்கில் இருந்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மாறவில்லை.

தன்னைப் பற்றி வார இதழ் ஒன்று வெளியிட்ட செய்தி காரணமாக அந்த இதழின் விருதுநகர் மாவட்ட செய்தியாளர் மீது நேற்று முன் தினம் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் வெகுண்டெழுந்த பத்திரிகையாளர்கள் சென்னையில் போராட்டம் நடத்தியதுடன், அமைச்சருக்கு கண்டனமும் தெரிவித்துள்ளனர். மேலும், மூத்த பத்திரிகையாளர்கள் சிலர் ராஜேந்திரபாலாஜியை பற்றி முதல்வர் தரப்பில் புகாரும் கூறியுள்ளனர். ஏற்கனவே ராஜேந்திரபாலாஜியும் பேச்சும், செயல்பாடும் முதல்வருக்கு பிடிக்காமல் இருந்த நிலையில் பத்திரிகையாளர் மீதான தாக்குதல் மேலும் அவருக்கு கோபத்தை அதிகப்படுத்தியுள்ளது.
அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, உதயகுமார், போன்றோரும் ராஜேந்திரபாலாஜி இந்த விவகாரத்தில் அமைதி காத்திருக்க வேண்டும் என்றும், அவசரப்பட்டிருக்க கூடாது எனவும் அதிருப்தி தெரிவித்தார்களாம். இதனிடையே துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஸிடம் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஏன் இப்படி நடந்துகொள்கிறார் என முதல்வர் வருத்தப்பட்டிருக்கிறார். அவரும் என்ன சொல்வது எனத் தெரியாமல் விசாரிப்போம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications