தமிழகத்தில் வீடு இல்லாத குடும்பமே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்... முதலமைச்சர் புதிய வாக்குறுதி..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வீடில்லாத குடும்பமே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அடுத்த 5 ஆண்டுகளில் வீடு இல்லாதவர்கள் அனைவருக்கும் படிப்படியாக வீடு கட்டித்தரப்படும் என்ற புதிய வாக்குறுதியை முதலமைச்சர் கொடுத்திருக்கிறார்.

சென்னை தியாகராயர் நகரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் தின பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இதனைக் கூறினார். எம்.ஜி.ஆரின் வாரிசு அதிமுக தான் என்றும் இன்று கட்சி தொடங்குபவர்கள் எம்.ஜி.ஆரின் பெயரை உச்சரிக்காமல் கட்சி தொடங்க முடியாத நிலை உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Edappadi palanisami says,Home for everyone in Tamil Nadu

சிறு வயதிலேயே வறுமையை உணர்ந்து வளர்ந்ததால் வறுமையில் இருப்பவர்களின் தேவையறிந்து அவர்கள் கேட்காமலேயே உதவிகளை செய்துகொடுத்தவர் எம்.ஜி.ஆர். என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் தெரிவித்தார்.

மேலும், ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது என்ன செய்திருக்கிறார் என்று வினவிய முதலமைச்சர், திமுக ஆட்சியமைக்கும் என ஸ்டாலின் கனவுகண்டு கொண்டு இருப்பதாக விமர்சித்துள்ளார்.

காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு கூடுதல் நிதி கோரி தாம் டெல்லி செல்லவுள்ளதாகவும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு தேவையான பணிகளை அதிமுக அரசு முழுமையாக மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். ஆட்சியில் இருந்தபோது ஸ்டாலின் என்ன செய்தார் என கூறமுடியுமா என வினவினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+