வண்டியை விருதுநகருக்கு விடுங்க... ஏர்வாடி தர்ஹா பயணதிட்டத்தை ரத்து செய்த முதல்வர்
சென்னை: ராமநாதபுரத்தில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவை முடித்துவிட்டு மதுரை திரும்பும் வழியில் முதல்வர் ஏர்வாடி தர்ஹாவுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த பயணதிட்டம் கடைசியில் ரத்து செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தானில் கடந்த 1-ம் தேதி அன்று புதிய அரசு மருத்துவக்கல்லூரிக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வந்த முதல்வர் அங்கிருந்து கார் மூலம் விழா நடைபெறும் இடத்திற்கு சென்றார். அவருக்கு ராமநாதபுரம் மாவட்டச் செயலாளரும், எடப்பாடியாரின் தீவிர விசுவாசியுமான முனியசாமி உற்சாக வரவேற்பு அளித்து அசத்தினார்.
ராமநாதபுரம் மாவட்ட நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்துகொள்வதற்காக புறப்பட்ட முதல்வரை, உள்ளூர் கட்சிக்காரர்கள் போகும் வழியில் உள்ள ஏர்வாடி தர்ஹாவுக்கு செல்லுமாறு கேட்டிருக்கின்றனர். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வரும் சூழலில், முதல்வரின் தர்ஹா விசிட் ஓரளவு பலனளிக்கும் என யோசனை தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் முதல்வர் தரப்பில் அதை ஏற்றுக்கொள்ளவில்லையாம்.
ஏற்கனவே சி ஏ ஏ விவகாரத்தில் ஆட்சியையும், கட்சியையும், இஸ்லாமியர்கள் ரவுண்டு கட்டி வரும் நிலையில், வாலன்ட்ரியாக தர்ஹாவுக்கு சென்று வம்பில் மாட்டிக்கொள்ள விரும்பவில்லையாம் முதல்வர். இதனால் ராமநாதபுரம் மாவட்ட நிகழ்ச்சிகளை முடித்த கையோடு வண்டியை விருதுநகருக்கு விடச் சொல்லியுள்ளார். திருச்சுழி வழியாக விருதுநகர் சென்ற முதல்வர் அங்கும் புதிய மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு மதுரை சென்றடைந்தார்.
அங்கு உற்சாக மூடில் இருந்த அவர் கமல்ஹாசன் பற்றி ஒரு பிடி பிடித்தார். பின்னர் மதுரை மாவட்ட செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்களுடன் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார்.
-
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
கொக்கு போல் காத்திருந்த எடப்பாடி.. சீனியர்களை சின்னாபின்னாம்மாக்கி மாஸ்! இப்படி ஒரு ப்ளானா? சூப்பர்! -
சென்னை சிறுவனுக்கு பாலியல் தொல்லை! கோட் சூட் போட்டோஷூட் நடத்தினால் மட்டும் போதாது! இபிஎஸ் அட்வைஸ் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications