9 நாட்களுக்குப் பிறகு நேருக்கு நேராக.. ஒரே மேடையில் ஈபிஎஸ், ஓபிஎஸ்.. அன்னிக்கு கூட பார்க்கலயே..!

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுக பொதுக்குழு மேடையில், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அமர்ந்துள்ளனர். அவர்களுக்கு நடுவில் தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அமர்ந்துள்ளார்.

Recommended Video

    அதிமுகவின் அடுத்த பொதுக்குழு கூட்டம் 11.7.2022 அன்று நடைபெறும்

    ஒற்றைத் தலைமை பிரச்சனைக்குப் பிறகு சந்தித்துக் கொள்ளாமலேயே இருந்து வந்தனர். இந்நிலையில், 9 நாட்களுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இன்று நேரடியாக ஒரே கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    பரபரப்பான சூழலில், பொதுக்குழு உறுப்பினர்களின் கூச்சல்களுக்கு மத்தியில் இன்று பொதுக்குழு கூடியிருக்கும் நிலையில், அரங்கிற்குள்ளும், வெளியேயும் பரபரப்பு நிலவுகிறது.

     பொதுக்குழு

    பொதுக்குழு

    அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் தொடங்கியுள்ளது. எடப்பாடி பழனிசாமி வாகன அணிவகுப்புடன் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு சற்று முன்னதாக பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு வருகை தந்தார். முன்னதாகவே அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் அரங்கிற்குள் வந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மேடைக்கு செல்லாமல் தனி அறையில் காத்திருந்தார்.

     மேடைக்கு வந்த இரட்டைத் தலைமை

    மேடைக்கு வந்த இரட்டைத் தலைமை

    அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்காத நிலையில், எடப்பாடி பழனிசாமியை மூத்த நிர்வாகிகள் சென்று வரவேற்றனர். இதையடுத்து, இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மேடைக்கு வந்தார். அவரைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மேடைக்கு வந்தார். அப்போது பொதுக்குழு உறுப்பினர்கள் எழுந்து நின்று முழக்கமிட்டனர்.

    அருகருகே அமராமல்

    அருகருகே அமராமல்

    பொதுக்குழு நடைபெறும் மேடைக்கு வந்தார் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி. அவரைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மேடைக்கு வந்தார். ஓ.பி.எஸ் - ஈபிஎஸ் இருவரும் அருகருகே அமராமல் ஒரு நாற்காலி இடைவெளி விட்டு அமர்ந்துள்ளனர். இருவருக்கும் நடுவே தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அமர்ந்துள்ளார்.

    சந்தித்துக் கொள்ளவில்லை

    சந்தித்துக் கொள்ளவில்லை

    கடந்த ஜூன் 14ஆம் தேதி பொதுக்குழுவுக்கு முன்னதாக நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தான் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அந்தக் கூட்டத்திற்குப் பின்னர் ஓ.பி.எஸ் மற்றும் ஈபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனைகளில் ஈடுபட்டு வந்தனர். ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் ஒருவரையொருவர் நேரடியாக சந்தித்துக் கொள்ளவில்லை.

    9 நாட்களுக்குப் பிறகு

    9 நாட்களுக்குப் பிறகு

    கடந்த 18ஆம் தேதி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்று ஆலோசனையில் ஈடுபட்டபோதும், எடப்பாடி பழனிசாமி அங்கு வரவில்லை. இதனால், இருவரும், ஒற்றைத் தலைமை பிரச்சனைக்குப் பிறகு சந்தித்துக் கொள்ளாமலேயே இருந்து வந்தனர். இந்நிலையில், 9 நாட்களுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இன்று நேரடியாக ஒரே கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+