சட்டசபையை ஆளுநர் புறக்கணிக்கவில்லை! திட்டமிட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்! எடப்பாடி பழனிசாமி நறுக்
சென்னை: ஆளுநர் உரை பார்ப்பதற்கு காற்றடித்த பலூன் போல் உள்ளது. ஆனால் அதன் உள்ளே ஒன்றும் இல்லை என தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் ஆளுநர் உரையை புறக்கணிக்கவில்லை, அவர் திட்டமிட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் முதல் தமிழக சட்டசபையின் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இன்றைய தினம் ஆளுநர் உரையாற்றவிருந்தார். ஆளுநர் ரவி தமிழக சட்டசபைக்குச் சென்றதும் அவரை தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு வரவேற்றார். அவருக்கு காவல் துறை அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது.

இதையடுத்து ஆளுநர் உரையாற்றவிருந்த போது முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதற்கு ஆளுநர் எதிர்ப்பு தெரிவித்து 3 நிமிடங்களில் அவையை விட்டு வெளியேறிவிட்டார். அதாவது ஆளுநர் உரையை படிக்காமலேயே அவர் வெளியேறினார்.
இந்த நிலையில் தமிழக சட்டசபையில் யார் அந்த சார் என்ற பேட்ஜ்களுடன் அதிமுக எம்எல்ஏக்கள் வந்தனர். அவர்கள் சட்டசபையில் நின்றுக் கொண்டு முழக்கங்களை இட்டனர். இதையடுத்து சபாநாயகர் அவர்களை அமருமாறு சொன்னார்.
ஆனால் அவர்கள் கேட்காததால் அவர்களை அவைக் காவலர்களை வைத்து வெளியேற்ற சொன்னார். இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியிருப்பதாவது: ஆளுநர் உரை பார்ப்பதற்கு காற்றடித்த பலூன் போல் பெரிதாக உள்ளது.
ஆளுநர் உரையில் ஒன்றும் இல்லை. தமிழக சட்டசபையின் மரபு எப்போதும் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆளுநர் உரையை புறக்கணிக்கவில்லை! திட்டமிட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார். ஆளுநர் உரை இல்லாமல் சபாநாயகர் உரையாகவே இருக்கிறது. ஆளுநர் உரையில் திமுக அரசின் சுயவிளம்பரம் மட்டுமே உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த அரசு எந்த நலத்திட்டங்களையும் செய்யவில்லை. பேசியதையே திரும்ப திரும்ப இந்த அரசு பேசி வருகிறது.
பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் இந்த அரசு இனியும் தூங்கிக் கொண்டிருக்கக் கூடாது, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் பதாகைகளுடன் சட்டசபைக்கு வந்தோம். யார் அந்த சார், எதற்காக இந்த அரசு பதற்றப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் அமைச்சர்கள் மாற்றி மாற்றி அறிக்கை விடுகிறார்களே! யார் அந்த சார்னு கேட்டால் இந்த அரசுக்கு ஏன் கோபம் வருகிறது. மாணவி பலாத்காரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவதுதான் இந்த அரசினுடைய கடமையாக இருக்க வேண்டும்.
ஆனால் யாரையோ காப்பாற்றுவதற்கு இந்த அரசு முயற்சி செய்துக் கொண்டிருப்பதுதான் மக்களுடைய சந்தேகம். அதனால்தான் தமிழகம் மட்டுமில்லை, இந்திய அளவில் யார் அந்த சார் என கேட்கும் அளவுக்கு குரல் ஒலிக்கிறது.
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை நடத்தியதாக ஊடகங்கள் சொல்கின்றன. ஆனால் உண்மையில் அதிமுக வழக்கறிஞர் வரலட்சுமி என்பவர்தான் ரிட் மனு தாக்கல் செய்து இந்த வழக்கை கொண்டு செல்கிறார். இதனால்தான் 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகளை கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்த வழக்கை அதிமுக தொடர்ந்தது. இந்த அரசை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை என்பதால் நாங்கள் இதில் தலையிட்டோம். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
கோவையில் போட்டியா?... முதல்வரின் விருப்பத்தால் விரக்தியில் செந்தில் பாலாஜி! -
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி வெயிட்டிங்! இவர்களிடம் தமிழ்நாடு சிக்கினால் என்ன ஆகும்? ஸ்டாலின் அட்டாக் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின்












Click it and Unblock the Notifications