பெரிய விலை கொடுக்க போறீங்க.. ஒரு சீட்டு கூட கிடைக்காது.. எடப்பாடிக்கு போன வார்னிங்.. மொத்தமா ஓவரா?
சென்னை: தேர்தல் மட்டும்தான் இப்போது எடப்பாடி பழனிசாமி குரு பூஜைக்கு செல்ல காரணம். ஆனால் இதை எல்லாம் முக்குலத்தோர் நம்ப மாட்டார்கள். அவர்கள் இதை எல்லாம் நம்பி வாக்கு அளிக்க மாட்டார்கள். அவர்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆன பின் எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக தேவர் குரு பூஜைக்கு நேற்று சென்றார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 116வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை நடந்தது. பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் அவர் அங்கே சென்றார். இங்கே எடப்பாடி மரியாதை செலுத்தும் போதே.. அவருக்கு எதிராக கடுமையான கோஷம் எழுப்பப்பட்டது. எடப்பாடி ஒழிக.. இபிஎஸ் ஒழிக என்று கோஷம் எழுப்பப்பட்டது .

இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், தேர்தல் மட்டும்தான் இப்போது எடப்பாடி பழனிசாமி குரு பூஜைக்கு செல்ல காரணம். ஆனால் இதை எல்லாம் முக்குலத்தோர் நம்ப மாட்டார்கள். அவர்கள் இதை எல்லாம் நம்பி வாக்கு அளிக்க மாட்டார்கள். அவர்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். இதை எல்லாம் நம்பி வாக்கு கொடுக்க மாட்டோம். அவர் நம் முதுகில் குத்திவிட்டார் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். அதனால் எடப்பாடிக்கு இதனால் எல்லாம் வாக்கு கிடைக்கும் என்று சொல்ல முடியாது. அங்கே அவருக்கு ஒரு சீட் கூட கிடைக்காது.
நேற்று பெரிய பிரச்சனை நடந்திருக்கும். குருபூஜையில் எடப்பாடியால் மோதல் வந்திருக்கும். ஆனால் தேவரை பார்க்க வந்துள்ளார் என்ற ஒரே காரணத்திற்காக அவர் மீது யாரும் தாக்கவில்லை. மரியாதைக்காக எடப்பாடியை விட்டு வைத்தனர். அவர் 2-3 வருடம் உழைக்க வேண்டும். அப்போதுதான் முக்குலத்தோர் நம்பிக்கையை பெறுவார். அதிமுக மீண்டும் சேர வேண்டும், தினகரன், ஓ பன்னீர்செல்வத்தை இணைக்க வேண்டும். அப்போதுதான் சமாதானம் செய்ய முடியும்.

பிரச்சனை மேல் பிரச்சனை: ஆனால் அதை பற்றி எல்லாம் எடப்பாடி பழனிசாமி பேசுவது இல்லை. அவரின் நடவடிக்கைக்கு சரியான விலை கொடுக்க போகிறார். அவரின் செயலுக்கு கண்டிப்பாக சிக்கல் வரும். அவர் முக்குலத்தோரை காயப்படுத்திவிட்டார். அதற்கு பதில் தர வேண்டும். இல்லையென்றால் 2024ல் அவர் பதில் சொல்லியே ஆக வேண்டும். இதே போக்கை அவர் கடைபிடித்தால் முக்குலத்தோர் அவருக்கு வாக்கு அளிக்க மாட்டார்கள். அவரை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.
எடப்பாடிக்கு வெற்றிவாய்ப்பு இல்லாமல் போகும் என்பதை உறுதியாக சொல்லலாம். அவரை முடக்கி போடும் வாய்ப்புகள் உள்ளன. எடப்பாடி முக்குலத்தோரை பழிவாங்கிவிட்டார். சசிகலா யாரு என்று கேட்டவர் எடப்பாடி. அவரை எப்படி முக்குலத்தோர் மன்னிப்பார்கள். சொல்லுங்கள். அவரை பழிவாங்கியதை விடுங்கள்.. ஓ பன்னீர்செல்வத்தை பழிவாங்கி உள்ளார். டிடிவி தினகரனை பழிவாங்கி உள்ளார். முக்குலத்தோரை மொத்தமாக அவர் பழிவாங்கி உள்ளார். அவரை எப்படி முக்குலத்தோர் பிரிவினர் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறீர்கள்.
இது போக முக்குலத்தோர் இடஒதுக்கீட்டீல் பிரச்சனை செய்துள்ளீர்கள். அவர் மனசாட்சி உறுத்த வேண்டும். அந்த மக்களுக்கு அவர் துரோகம் செய்துள்ளார். அந்த துரோகத்தை செய்துவிட்டு அவர் எப்படி குருபூஜைக்கு செல்ல முடியும். அவர் இப்போது இரட்டை வேடம் போட்டால் அதனால் பலன் இல்லை. முக்குலத்தோர் எமோஷனலான மக்கள். அவர்கள் இதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள். அவருடன் இருக்கும் ஆட்களுக்கும் கூட இது தெரியும். எடப்பாடி பழனிசாமி இதை உணர வேண்டும், என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
-
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications