இன்று "கிளைமேக்ஸ் ஸ்கெட்ச்.." ஓபிஎஸ் பதவியை காலி செய்யும் எடப்பாடி? ஒற்றை தலைமை நோக்கி அதிமுக
சென்னை: ஓபிஎஸ்ஸின் எதிர்ப்பை தாண்டி அதிமுக பொதுச் செயலாளராகிறாரா எடப்பாடி பழனிச்சாமி? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக பொதுக் குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இது தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து பேசியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பகிரங்கமாக அறிவித்தார்.
அன்று முதல் கடந்த 8 நாட்களாக அதிமுகவில் சலசலப்புகளும் பதற்றங்களும் பஞ்சம் இல்லாமல் உள்ளன. மூத்த நிர்வாகிகளுடன் இரு தலைமைகளும் தனித்தனியே ஆலோசனை நடத்தியதால் மேலும் விறுவிறுப்பு கூடியது.

தீர்மானம்
இந்த நிலையில் பொதுக் குழுவுக்கான தீர்மானத்தை இறுதி செய்யும் குழுவின் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இதில் எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்வதற்கான தனித்தீர்மானம் இறுதி செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுக் குழு
பொதுக் குழு கூட்டத்திற்கு ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும் அதை நடத்தியே தீர வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் முடிவு செய்துள்ளனர். இதற்கு ஓபிஎஸ் தரப்பினர் என்ன செய்வர் என்பது தெரியவில்லை. இந்த நிலையில் கடந்த 7 நாட்களுக்கு பிறகு அதிமுக ஐடி விங் கூட்டம் ஒன்றில் எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரவு பேசியிருந்தார்.

உள்கட்சி பூசல்
அப்போது அவர் உள்கட்சி பூசல் குறித்து பேசியுள்ளார். அதிமுகவை வீழ்த்த சிலர் முயற்சி செய்வதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக வீழ்ந்ததாக சரித்திரமே இல்லை. கட்சியை நாம் காப்பாற்றுவோம். அதிமுகவின் நல்ல எதிர்காலத்தை உறுதி செய்ய உங்களுடன் பாடுபடுவேன் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
Recommended Video

மும்முரம்
அப்போது அங்கிருந்த அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் "அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி" என கோஷமிட்டனர். அப்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தடுக்கவில்லை. அவர்களின் கருத்தை ஆமோதிப்பது போல் அமைதியாக நின்றிருந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. இதனால் அதிமுக பொதுச் செயலாளராக மும்முரம் காட்டி வருகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications