புஸ்ஸூனு போச்சே.. எடப்பாடி பழனிசாமி "கொடி" பறக்குதா? அப்ப பாஜகவுக்கு வேற வழியேயில்லையா? புது தலைவலி
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பசும்பொன் வருகையானது, மிகப்பெரிய அதிர்வுகளை அதிமுக, பாஜக தரப்பில் ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பான விவாதங்களும், கருத்துக்களும் சோஷியல் மீடியாவை வட்டமடிக்க துவங்கி உள்ளன.
எடப்பாடி பழனிசாமியின் கடந்த ஆட்சி காலத்திலிருந்தே, கொங்கு கோட்டையாக "அதிமுக" சுருங்கிவிட்டதாக ஒரு பேச்சு நிலவியபடியே உள்ளது.. அதற்கேற்றவாறு, சசிகலா, தினகரன், ஓபிஎஸ் போன்றோரை கட்சியிலிருந்தே தூக்கியெறிந்துவிடவும், முக்குலத்தோர் மக்களின் கோபத்தையும் எடப்பாடி பழனிசாமி, ஒரேயடியாக சம்பாதித்து கொள்ள நேரிட்டதை மறுக்க முடியாது.

இதற்கு நடுவில், வன்னியர் இடஒதுக்கீடு விவகாரம் சேர்ந்து கொண்டதால், அந்த கோபம் இன்றுவரை எடப்பாடி மீது எதிரொலித்தவாறே உள்ளது. இதைத்தான், பசும்பொன்னில் நடந்த நிகழ்வும் தமிழகத்துக்கு எடுத்துக்காட்டி உள்ளது.
பசும்பொன்: "தேர்தல் ஆதாயத்திற்காக வர வேண்டாம், பசும்பொன்னில் இருந்து வெளியேறுங்கள், எடப்பாடி பழனிசாமி ஒழிக, இபிஎஸ் ஒழிக, சசிகலாவை ஏமாற்றிய எடப்பாடி, தேவர் வாக்கை பெற வந்த எடப்பாடி" போன்ற முழக்கங்களும் எடப்பாடி பழனிசாமியை பசும்பொன்னிலிருந்து கிளம்பும்வரை விடாமல் துரத்தி துரத்தி வந்தன.
ஓபிஎஸ், தினகரன், சசிகலா இந்த 3 பேரின் ஆதரவும் இல்லாமல், தன்னால் தென்மண்டலங்களிலும் வெற்றி பெற முடியும் என்பதை மேலிட பாஜகவுக்கு உணர்த்தவே, கடந்த ஒரு வருட காலமாகவே, எடப்பாடி பழனிசாமி பலவித முயற்சிகளை எடுத்து வந்ததாக சொல்லப்பட்டது. எனினும், அத்தனையும் தோல்வியையே தந்துள்ளதாக தெரிகிறது.
பாஜக மேலிடம்: இந்த நிகழ்வுகளையெல்லாம் பாஜக, கவனிக்காமல் இல்லை. அதனால்தான், ஆரம்பத்திலிருந்தே, "ஒருங்கிணைந்த அதிமுக" என்ற விஷயத்தில் உறுதியாக இருந்து வருகிறது. தற்போதைய பசும்பொன் நிகழ்வும் இந்த உறுதியை மேலும் வலுப்படுத்தியிருக்கிறது.
இப்போது, எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டிப்புக்கவலை சூழ்ந்துள்ளதாம்.. அதன்படி, தென்மண்டலங்களிலும், அதிமுகவின் கொடியை பறக்கவிட வேண்டும், பாஜகவின் தயவு இல்லாமலும், தேர்தலை வென்றாக வேண்டும் என்பதே அந்த முக்கிய கவலைகளாகும்.
இப்போது, பாஜகவுக்கும் இரட்டிப்புக்கவலை சூழ்ந்துள்ளதாம்.. ஒருங்கிணைந்த அதிமுக இருந்தால் மட்டுமே, தென்மாவட்டங்களில் தங்களால் காலூன்ற முடியும், பலம்பொருந்திய திமுகவையும் எதிர்க்க முடியும் என்பதில் கூடுதல் உறுதித்தன்மையை பூண்டுள்ளதாம்.
எடப்பாடி பழனிசாமி: அதுமட்டுமல்ல, ஓபிஎஸ் + தினகரனை கழட்டிவிட்டுவிட்டால், தென்மண்டலங்களில் கிட்டத்தட்ட 15 தொகுதிகளில், அதிமுக சறுக்கலை சந்திக்க நேரிடும்.. அந்த 15 இடங்களுமே திமுகவுக்கு சாதகமாகிவிடும் என்பதையும் பாஜக உணர்ந்துள்ளது. அதனால்தான், எப்படியாவது எடப்பாடி பழனிசாமியை சமாதானம் செய்து, "ஒருங்கிணைந்த" கூட்டணிக்கான முயற்சியை கையிலெடுக்கும் என்கிறார்கள்.
ஆனால், எடப்பாடியே இதற்கு ஒப்புக் கொண்டுவிட்டாலும்கூட, எடப்பாடி + ஓபிஎஸ் + தினகரன் + சசிகலா இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்தாலும்கூட, அதிமுகவின் பழைய வாக்கு வங்கி திரும்ப வருமா? என்பதும் சந்தேகம்தானாம். அந்தவகையில், எடப்பாடியின் பசும்பொன் நிகழ்வானது, பலவித யூகங்களையும், குழப்பங்களையும் அரசியல் களத்தில் ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன..
தராசு ஷ்யாம்: ஒருமுறை, மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், ஒரு பேட்டியில் சொன்னதை, இப்போது நாம் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.. "எடப்பாடி பழனிசாமி என்பவர் அகில இந்திய தலைவர் கிடையாது.. தமிழகத்திலேயே வேறு ஏதாவது தொகுதியில் நின்று எடப்பாடி ஜெயிப்பாரா? ஆண்டிப்பட்டியில் எடப்பாடி ஜெயிப்பாரா? மதுரை மேற்கில் நின்று ஜெயிப்பாரா? தர்மபுரியில் ஜெயிப்பாரா? அவர் மாவட்டத்தில் மட்டும் தான் அவரால் ஜெயிக்க முடியும்.. காரணம் இவர் பகுதி தலைவர்..
ஓபிஎஸ்: ஓபிஎஸ்ஸுக்கும் இது பொருந்தும்.. அவரும் சேலத்தில் நின்று ஜெயிக்க முடியாது.. ஆக, இவர்கள் எல்லாருமே பகுதி தலைவர்கள்தான்.. மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, தமிழகத்தில் எங்கு நின்றாலும் அவர்களால் வெற்றி பெற முடிந்தது என்றால், அதற்கு காரணம் அவர்கள், அனைவருக்குமான தலைவர்களாக அரவணைத்து செல்லும் தலைவர்களாக இருந்தார்கள்" என்று கூறியிருந்தார்.
ஆக, எடப்பாடியும் சரி, ஓபிஎஸ்ஸும் சரி, அனைவருக்குமான தலைவர்களாக தங்களை உருவாக்கிகொள்வார்களா? அல்லது "அடையாள" அதிமுகவையே மீண்டும் முன்னிறுத்திவிடுவார்களா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!
-
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications