எடப்பாடி பழனிச்சாமியின் மனைவி ராதாவுக்கு கொரோனா உறுதி!
சென்னை: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அண்மைக்காலமாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. பல்வேறு மாநிலங்களிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகவே உள்ளது.
இந்த நிலையில் பொது இடங்களில் முகக் கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கும் சபாநாயகர் தனபாலுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. கடந்த 23 ஆம் தேதி நடந்த பொதுக் குழு கூட்டத்திலும் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் நடந்த ஆலோசனைகளிலும் கடம்பூர் ராஜூ பங்கேற்றிருந்தார்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் மனைவி ராதாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராதா கிரீன்வேஸ் சாலை இல்லத்திலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.
அதிமுகவில் பெரும்பாலானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுக் குழுவில் கலந்து கொண்ட கடம்பூர் ராஜுவுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதால் அதை காரணம் காட்டி வரும் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக் குழுவை ஒத்தி வைக்க ஓபிஎஸ் தரப்பு முயற்சித்து வருகிறது.












Click it and Unblock the Notifications