கடவுளுக்குத்தான் தெரியும் என்று முதல்வர் சொன்னதில் தவறு இல்லை.. ஸ்டாலினுக்கு ஏன் கோபம்- விஜயபாஸ்கர்
சென்னை: கொரோனா எப்போது குறையும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் என்று முதல்வர் கூறியதில் தவறு இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்தார்.
இன்று மாலை வீடியோ வாயிலாக நிருபர்களுக்கு பேட்டியளித்தார் விஜயபாஸ்கர். அப்போது அவர் கூறியதாவது:
அதிகமாக பரிசோதனை செய்தால்தான் நோய் பரவலை தடுக்க முடியும். ஒரு சோதனை மையத்துடன் ஆரம்பித்து இப்போது 87 பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன.

விழிப்புணர்வு தேவை
தினமும் சராசரியாக 30 ஆயிரம் பரிசோதனைகள் செய்யக்கூடிய திறன் தமிழகத்தில் உள்ளது. இந்தியாவிலேயே இதுதான் மிக அதிகமாகும்.
மக்கள் பீதி அடைய தேவையில்லை. ஆனால் மிகவும் எச்சரிக்கையாக விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

வல்லுனர்கள்
இயற்கை பேரிடர் ஒருமுறை வந்து சென்று விடும். அந்த பேரிடர் சென்ற பிறகு நாம் மீட்பு பணிகளை நடத்தலாம். ஆனால் கொரோனா நோய் பாதிப்பு என்பது உலகளாவிய பெரும் தொற்றுநோய் ஆகும். கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரி காரணமாக, ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடர் ஆகும். இது எப்போது முடிவுக்கு வரும், எப்படி பரவும் என்பதை வல்லுநர்கள் கணிக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.

வெளிப்படையாக கோவிலுக்கு போகும் முதல்வர்
இந்த நிலையில்தான், சென்னை வேளச்சேரியில் குருநானக் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்ட கொரோனா முகாமை ஆய்வு செய்தார். அப்போது கொரோனா வைரஸ் பரவல் எப்போது குறையும் என்று பத்திரிகையாளர் கேட்டார். முதல்வர் கடவுள் பக்தி கொண்டவர். வெளிப்படையாக கோவிலுக்கு செல்ல கூடியவர். எனவே எதார்த்தமாக ஒரு பதில் அளித்தார். கடவுளுக்குத்தான் தெரியும் என்று அவர் கூறினார். இதில் என்ன தவறு இருக்கிறது?

தவறு இல்லை
கடவுள் என்ற வார்த்தையை சொன்னதில் எதற்கு நீங்கள் குற்றம் கண்டுபிடிக்கிறீர்கள்? கடவுள் என்ற வார்த்தையை சொன்னதும் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஏன் கோபம் வருகிறது. வல்லுனர்களால் கணிக்க முடியவில்லை. மருத்துவர்களால் கணிக்க முடியவில்லை. உலக சுகாதார அமைப்பால் கணிக்க முடியவில்லை. எனவேதான் முதல்வர் கடவுளுக்குத்தான் தெரியும் என்று சொன்னார். இதில் எந்த தவறும் கிடையாது. ஆக்கபூர்வமான விமர்சனங்களை செய்யுங்கள் அதைவிடுத்து சம்பந்தமில்லாமல் குற்றம் சாட்டுவது தேவையற்றது என்று நான் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications