Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொகுதி பங்கீடு.. பழனிசாமியுடன் பேசியது என்ன?.. நயினார் நாகேந்திரன் பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்துவதற்க அதிமுக - பாஜக கூட்டணி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அமைச்சர் அமித்ஷா கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு வந்தார். பிறகு எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார். அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி - நயினார் நாகேந்திரன் ஆகியோர் சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் பரபரப்பான வியூகங்களுடன் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. ஆட்சியை தக்க வைப்பதற்க திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக கூட்டணியும் முட்டி மோதி வருகின்றன. திமுகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்கிற அஜென்டாவுடன் டெல்லி பாஜக களமிறங்கியுள்ளது.

Edappadi Palanisamy Nainar Nagendran

அதிமுக - பாஜக கூட்டணி

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக தமிழ்நாடு அரசியல் நிலவரத்தை கண்காணித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அமித்ஷா தமிழ்நாடு வந்திருந்தார். அவரை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திருச்சி தனியார் ஹோட்டலில் சந்தித்து உரையடினார். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லி சென்றார்.

அங்கு அவர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது கூட்டணியை பலப்படுத்துவது, அதிமுக உள்கட்சி பிரச்சனை, பிரிந்தவர்களை இணைப்பது, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி இந்த மாதம் இறுதியில் தமிழ்நாடு வருகை புரியவுள்ளார். அதற்கு முன்பாக கூட்டணியை இறுதி செய்ய தேசிய ஜனநாயக கூட்டணி திட்டமிட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி - நயினார் நாகேந்திரன் சந்திப்பு

இதனால் தான் டெல்லி செல்வதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி பாமக கூட்டணியை உறுதி செய்தார். முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோருக்கான கதவுகளை மூடிய எடப்பாடி பழனிசாமி, தேமுதிக மற்றும் டிடிவி தினகரனை கூட்டணியில் இணைப்பதற்கு முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமமுக பொதுச்செயலாளர் தினகரன் டெல்லியில் முகாமிட்டுள்ளார்.

அதேநேரத்தில் அதிமுக - பாஜக தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. அதிமுகவிடம் 56 தொகுதிகள் மற்றும் 3 அமைச்சர் பதவி கேட்டு பாஜக காய் நகத்துகிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி - நயினார் நாகேந்திரன் சென்னையில் இன்று சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது. பிரமரின் தமிழக வருகை குறித்து ஆலோசித்தோம் என்றும், பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பதை பின்னர் கூறுகிறேன் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+