21 நாள் ஊரடங்கு விடுமுறை அல்ல.. உங்கள் குடும்பத்தை பாதுகாக்கும் அரசின் உத்தரவு- முதல்வர்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி இந்தியா முழுவதும் அமல்படுத்திய 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு என்பது விடுமுறை அல்ல. உங்கள் குடும்பத்தை பாதுகாக்கும் அரசின் உத்தரவு ஆகும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழகம் முழுவதும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது போல் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இந்தியா முழுவதும் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் லாக் டவுன் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் காய்கடை, மளிகைக் கடை, பால் பாக்கெட் கடை, மருந்து கடை தவிர்த்து மற்ற கடைகள் மூடப்பட்டது.

ஆலோசனை
மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் மக்கள் பெரும்பாலானோர் அந்த விதிகளை பின்பற்றவில்லை. போலீஸார் கைகூப்பி கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனாவுக்கு தமிழகத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

தேர்ச்சி
இதையடுத்து இன்று இரவு 7 மணிக்கு அவர் தமிழக மக்களிடம் உரையாற்றினார். அவர் பேசுகையில் கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல் உலகம் முழுவதும் பரவி வருகிறது. தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி வழங்கப்படும். மதம், ஜாதி, பொருளாதாரம் கடந்த மக்கள் ஒன்று கூட வேண்டும் . மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளேன். 21 நாள் ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல. இது உங்கள் குடும்பத்தை பாதுகாக்கும் அரசின் உத்தரவு ஆகும். கொரோனாவை விரட்டியடிக்க உறுதி ஏற்போம்.

குடும்பத்தில் ஒருவன்
தமிழக முதலமைச்சராக இல்லாமல், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பேசுகிறேன். கொரோனாவிற்கு எதிராக அரசு மட்டும் தனியா போராட முடியாது. எல்லோரும் சேர்ந்து போராட வேண்டும்: மக்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் கண்டிப்பாக வீட்டில் இருக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும், மக்கள் அச்சப்பட வேண்டாம்.

எடப்பாடி உரை
சமூக விலகலை கடைபிடியுங்கள். ஏப்ரல் மாதம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். பொறுப்பான குடிமக்களாக இருந்து சமூதாயத்தை காப்போம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
கொரோனா தொடர்பாக ஏற்கெனவே இரு முறை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிட்ம உரையாற்றிய நிலையில் தற்போது முதல்முறையாக தமிழக மக்கள் முன் எடப்பாடி உரையாற்றினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications